மெரினா..காந்தி சிலை.. பதிவர் சந்திப்பு..பதிவர்கள் வழக்கம் போல பேசத் துவங்க அங்கே திடீரென ஒரு பரபரப்பு..
ஜ்யோவ் : ஹே..நீங்க..நீ..அட ஆமா..நித்யானந்தர் தானே?
நித்தி : “ஆம் குழந்தைகளே..இன்றைய தேதியில் பதிவுலகம் தான் மிகவும் பவர்ஃபுல் மீடியா என்று கேள்விப்பட்டு இங்கே தஞ்சம் புக வந்தேன். என்னைக் காப்பாற்றுவீர்களா?”
பைத்தியக்காரன் : “ஆமாம்மா, நித்திம்மா, நிச்சயமாக. சர்வ நிச்சயமாக..என்று உரையாடிவிட முடியாது. ஆனாலும் உங்களின் மீதான வன்முறை, மீடியா தன்னை போலீஸாக உருவகப் படுத்திக்கொண்ட பொதுப்புத்தியின் நீட்சி”
லக்கி மெல்லிய குரலில் அதிஷாவிடம் : “இவரு ஃபுல்ஸ்டாப் வைக்காம பேசுறத கேட்டு அவராவே சரண்டர் ஆயிடுவாரு போலிஸ்கிட்ட”
பைத்தியக்காரன் : “அடுத்த மாதம் முதல் ஞாயிறு நாம் ஏன் ஒரு பட்டறை நடத்தக் கூடாது தோழமையான நித்யானந்தரே?”
நித்யானந்தர் : “பட்டறை என்றால்? லெளகீக வார்த்தையா?”
ஜ்யோவ் : “அய்யய்யே..அந்த எழவெல்லாம் இல்ல..இது உங்க எழவப்பத்திச் சொல்றாரு”
பைத்தியக்காரன் : “புரியும்படி உரையாடுகிறேன்”
அதிஷா : “ஹுக்கும்”
பைத்தியக்காரன் : “அதாவது தோழமை நித்தி, எப்படி கேமராவின் கழுகுக் கண்களுக்குச் சிக்காமல் உடல்மொழி இன்பம் காண்பது குறித்தான ஒரு பட்டறை..ஸ்லைட் ஷோ நிச்சயமாக இடம்பெற வேண்டும் என்பது என் அவா”
நித்தியானந்தர் : “நீங்க அவாளா?”
ஜ்யோவ் : “நாசமாப் போச்சு..அவரு ஆசையைச் சொல்றாரு”
நித்தி : “என்னதான் கடற்கரை என்றாலும் ஒரு சிறு ஜன்னலும் அதன் கதவுகளைத் திறந்தவுடன் வரும் காற்றின் சுகமும் அலாதி”
நர்சிம் : “நல்ல்ல்லாத் தொறந்ந்ந்தய்ய்ய்யா கதவ”
கார்க்கி : “இங்க சாளரம் இருக்கிறது..ஹிஹி நாந்தான்..ஆமா அந்த சிடியோட டைரக்டர் யாரு?”
நித்தி : “அதை மறக்கத்தானே இங்கு வந்தேன்..ஏன் குழந்தாய்?”
கார்க்கி : “இல்ல..இயக்குனர் பேரு தெரிஞ்சா, அவர் பேரப் போட்டு வாந்தி, பூந்தின்னு பதிவு போட்டு விடத்தான்”
பின்னால் இருந்து ஒரு குரல்..
“நலமா கார்க்கி?”
திரும்பிப் பார்த்தால் அண்ணாச்சி வடகரை வேலன்..அவரைப் பார்த்ததும் வராத போனை எடுத்த கார்க்கி.. “ஹலோ..ஆமா..ஆமா...” என்று நடக்கத் துவங்குகிறார்.
வடகரை : “முதல்ல ஒரு விசயம்ங்க..அந்த சிடில இருக்குறது நீங்கதானா? அந்த பொண்ணு அவங்கதானா? அது சிடி தானா? நம்ம வீட்ல இருந்தது டிவிதானா? அதை ஒளிபரப்பு செஞ்சது சன் நியூஸ் தானா?”
நித்தியின் முகம் பிரகாசமாகிறது..
நித்தி : “உங்க பேர் சார்?”
வடகரை : வேலன்..வடகரை வேலன்..என்னய நாட்..அதற்குள் குசும்பன் எழுந்து..
குசும்பன் : நித்தி ஸ்வாமிகளே..இந்த சிட்டைல என் பேர எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுங்க..”
நித்தி : “என்ன எழுத வேண்டும்?”
குசும்பன் : “இந்த சிட்டை கொண்டுவரும் நபரிடம் அந்த மேட்டர் பண்ணவும்”
சுரேஷ் கண்ணன் : “அயல் சினிமாக்களில் வந்த விதானங்கள் சில இப்படி இருந்தாலும் இங்கே அடிப்படையே தவறாக இருக்கிறது. சென்ற வாரம் என் பக்கத்துவீட்டு பையன் என்னிடம் சாமியார்னா என்ன அங்கிள் என்று கேட்டபொழுது அவன் மொழிக்குள் புகுந்து, இதெல்லாம் தப்பான மனிதர்களின் கூடாரம்..அதில் சில விசிலடிச்சான் குஞ்சுகள் தம்மின் வாசகப் பரப்பை வேற்று வெளியில் இட்டுச் செல்லும் என்று கூறிய பின் தெளிந்தான்.”
நர்சிம் : “ம்ம்ம்.”
கேபிள் சங்கர் கூட்டத்தில் நோட்டிஸ் பேப்பர்களை விநியோகிக்கிறார் .. அதில்..
நித்திபடம்..ரிவ்யூ
பொதுவாக சினிமா வியாபரத்திற்காக படம் எடுக்கப்படுகிறது. இந்த சிடி படம் எடுத்ததால் வியாபரம் ஆகிவிட்டது. சில கட் ஷாட்கள் ஒண்ட்ர்ஃபுல். சில இடங்களில் வசனங்கள் தெளிவாக இல்லை. அந்த ஆசரமத்தின் ஓனரின் சொந்தக்காரரின் ரஞ்சிதாவின் நித்தியானந்தாவின் சுவரின் ஆங்கிள் சரியாக இல்லை..எடிட்டிங் ஷார்ப்.
நித்தியானந்த சிடி : எ குட் எண்டர்டெய்னர் அண்ட் பியிட்டிஃபுல் சீன்ஸ் வித் ஃப்ரூட்ஸ்.
சுகுமாரன் : சூப்பர்ணா..
கேபிள் : “யோவ் வாய்லயே பின்னூட்டம் போடக்கூடாதுய்ய்யா..”
தண்டோரா : “மிஸ்டர் நித்தி, போறப்ப சைதாப்பேட்டை வழிதானே? நம்ம ஆபிஸ் வாங்க,..”
கார்க்கி : ஒரு நிமிசம் சகா.. நித்தி சகா.. நீங்க கரெக்ட்டாத்தான் இருந்தீங்க..ஆனா சில இலக்கியவாதிங்க உங்கள வேற வழிக்கு கொண்டு போய்ட்டாங்க சாருங்க, ஸாரி பாருங்க.. அதுதான் வினையே”
பைத்தியக்காரன் : “ஏம்மா நித்தி..நீங்க உலக சினிமாக்கள் பார்க்குறதுண்டாம்மா?”
நித்தி : “அதுக்கெல்லாம் நேரமே இல்லையே குழந்தாய்..”
கார்க்கி : “ஆமாமாமா..உங்களுக்கு எப்பிடி நேரம் இருக்கும்?”
தாமிரா @ ஆதி : “இங்க ஒரு விசயம் நான் சொல்லணும்..சொல்லலாமா”
அப்துல்லா : அதான் சொல்லணும்னு சொல்லிட்டே இல்லண்ணே..அப்புறம் என்ன சொல்லலாமா நொல்லலாமா?”
ஆதி : “இல்ல..அந்த சிடி குறித்து தான்..எல்லாமே ஓக்கே..சின்ன வருத்தம்..அதுல திங்கிற ஐட்டம் ஏதாவது காட்டி, குறிப்பா அந்த பெண் செய்த ஒரு பதார்த்தமா இருந்திருந்தா இன்னும் எக்ஸலண்ட்டா இருந்திருக்கும் ரிசல்ட்..பிரபலமா ஆகி இருக்கலாம்..ஹிஹி”
நித்தி : “இதைவிடவா?”
அப்துல்லா :ஏண்ணே நித்தி..ஒத்த சாமியார்தானா இல்ல ரெட்டச்சாமியார் ஸ்கீம் ஏதும் இருக்காண்ணே?”
நித்தி : “வேண்டாம் அன்பரே.. இருக்கும் இடத்திலயே கதவைத் திறந்து காற்றை வாங்கிக்கொண்டிருங்கள்..இங்கே புயல் அல்லவா வீசுகிறது..”
நர்சிம் : நிகழ்காலத்தில் நீங்கள் அப்படிக் கூடியதைத் தான் சங்க காலத்தில் உடன்போக்கு என்று குறிப்பிட்டார்கள்.. அதாவது
முத்துகள உதிர்க்கும் அவன அடிங்கடா என சில குரல்கள்..என்கவுண்ட்டர் செய்துவிடும் ரேஞ்சிற்கு ஒழிக்கிறது. நமனை அஞ்சோம் பார்ட்டி பம்முகிறது.
எங்கிருந்தோ வந்த வெண்பூ..ஸாரி கொஞ்சம் லேட் ஆ.”என்று சொல்ல வந்தவர்..நித்தியானந்தரைப் பார்த்ததும் தனக்கும் பதிவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாதவர் போல நடையைக் கட்டுகிறார். ஹலோ வெண்பூ..என குரல்கள் கேட்கக் கேட்க..நடையின் வேகம் அதிகரித்து மறைகிறார்.
கேவிஆர் ராஜா : “ஸ்வாமி..உங்களுக்கு BuZZன்னா என்னான்னு தெரியுமா?”
நித்தி : “வாழ்க்கையே பஸ் பயணம் தானே குழந்தாய்”
கேவிஆர் : “அப்ப வாங்க அங்க கும்முவோம், பை த வே..நீங்க பிரபல சாமியார் ஆக சில வழிகள் இருக்கு சொல்லவா?”
நித்தி : “அய்யா ராசா..பிரபலமானதை எப்படி மறக்கடிக்க ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க, ஆமாம் யார் இந்தக் குழந்தை? என்னை விட தேஜஸாகவும், இளமையாகவும் இருக்கிறாரே”
அனுஜன்யா : “அனுஜன்யா என் நாமம்..ஏய்..ச்சே..என் பேரு அனுஜன்யாம்மா,”
நித்தி : “பெயரைப் பார்த்தால் பெரிய கவிஞர் போலத் தெரிகிறதே..ம்ம்”
உடனே அனுஜன்யா நர்சிம்மிடம் மெதுவான குரலில், “ஏய் பெரிய ஞானி மாதிரி இருக்கேப்பா இவர் சொல்றது..கரெக்ட்டா பெரிய கவிஞர்னு சொல்லிட்டார்மா..சரி சரி விட்றா மொறைக்காதே”
அனுஜன்யா நித்யானந்திரிடம்..
பட்டாம்பூச்சி ஒரு முறை
சுற்றியும் சுற்றா ஒற்றை உலகின்
ஆதிப்ரதாப சேர்க்கையின்
சில் வண்டுகள் செவ்வந்தியூடான
பிளாஸ்டிக் புன்னகைகள்
கொண்டவளின் கைங்கர்ய
யாதோருவனோவளோ
என்றாகின பொழுதுகள்
கையை வான் நோக்கி உயர்த்தி, சாஸ்டாங்கமாக காலில் விழுகிறார் நித்தி..
பதறி ஒதுங்கிய அனுஜன்யா.. “இன்னும் ரெண்டு வரி இருக்கும்மா..ச்சே..சரி விடு.இட்ஸ்.. ஓக்கே..”
முரளி கண்ணன் : விடுங்க அனுஜன்யா, 1975ல சில படங்கள்ல்ல இந்த மாதிரி காட்சிகள் அதுக்கு அப்புறம் 80கள்ல படுக்கையறை காட்சிகள் அதிகம் வந்தாலும் இது போலத்தான் லைட்டை அமத்துவது போல..அப்புறம் கிராமத்து சைடுல இருந்து வந்த இயக்குனர்கள் 90கள்ல இது மாதிரி காட்சிகள் எடுத்து இருக்காங்க, இருந்தாலும் 2010 லக்கி ப்ரைஸ்ஸ்ஸ்.
புருனோ : “இன்னும் எத்தன ஆயிரம் சிடி இந்த மாதிரி வந்தாலும் மிஸ்டர் நித்யா, நீங்க ஏர் ஆர் ரகுமான் மாதிரியோ டெண்டுல்கர் மாதிரியோ புகழ் பெற முடியாது..புரிஞ்சிட்டா?”
பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நித்தி..பார்வையை கூராக்குகிறார்.. அங்கே யாரோ ஒரு பெண் நடைபயிற்சி செய்து கொண்டு இருக்கிறார்.
நித்தி : “பாவம் அந்தப் பெண்ணிற்கு ஏதோ பிரச்சனை நான் யோகா சொல்லிக்கொடுத்தால் உடனே சரியாகிவிடும்...”
அவன அடிங்கடாஆஆஆஆ...
பரிசல் : “நான் ஏதாவது கருத்து சொல்லலாம்ணு வர்ரங்காட்டியும் எல்லாமே முடிஞ்சுருதுங்கண்ணா.”
..
Thursday, March 11, 2010
Wednesday, March 10, 2010
செல்போன் சில்லுகள்...
“என்னெத் தேவிடியான்னு சொல்றீங்களே..என்கிட்ட வர்ற உங்களுக்கு எல்லாம் என்ன பேரு?”
கேட்டவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான் சின்னதுரை என்ற ச்சின்னா.
“என்ன பதில் சொல்றது. நான் கேள்வி கேட்டா, நீ பதிலுக்கு கேள்விய கேட்குற”
“ம்..சொல்லு சார்..என்னன்னு சொல்வீங்க”
“நான் அதெக் கேட்கலயே..ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தன்னு தானேக் கேட்டேன்”
“எல்லாம் ஒரே கர்மம் தான். இங்க வர்றதுல பத்துக்கு எட்டு கேட்குறது இதத்தான். என்ன பதில் சொன்னாலும் அப்பிடியான்னுட்டு போகப்போற..இதுக்கு எதுக்குக் கேட்கணும்? அதுக்கு நான் பதில் வேற சொல்லணுமா?..கிளம்பு சார்..”
மேற்கூரை சுண்ணம் ஆங்காங்கே பெயர்ந்திருந்த வீடு அது. நடுவில் கருடர்களைக் கொண்டிருந்த பழைய காலக் கட்டிடம். கொஞ்சம் கீழிறங்கிப் பார்த்தால், ச்சின்னாவும் அவளும் பெரிதாகத் தெரிவார்கள். பக்கவாட்டுச் சுவர்களில் ஆங்காங்கே வட்ட வடிவில் எண்ணெய்க் கறைகள்..பின் மண்டை நிழல் போலப் படிந்திருந்தது.
நகர மனம் வரவில்லை. அவளிடம் எதையோ எதிர்பார்த்துத் தான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும் அவன். அது என்ன என்பதை அறியாமல் நகரப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டவனாக இன்னும் கொஞ்சம் வசதியாக அமர்ந்தான்.
வெளியே ஆட்டோ டிரைவர்கள் இருவர் சண்டை போட்டுக் கொண்டிருப்பதும் ஒரு லாரியை ‘வர்ர்ர்லாம் ரைரைரை ரைட் வா வா’ என ரிவர்ஸ்க்கு வழி சொல்லும் குரலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டிருந்தது.
தண்ணீர் குடித்துக் கொண்டே மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள். பச்சை வர்ண பாட்டிலில் தண்ணீரும் பச்சையாகத் தான் தெரிந்தது. விஸ்தாரமான அந்த வீட்டில் கொஞ்சம் பழைய பொருட்கள் ஆனாலும் பளிச்சென்று இருந்தது வீடு. அவளும் தான்.
தொழிலுக்கென்றே பிரத்யோகமாகச் செய்திருப்பார்களோ என்று தோன்றும்படியான நல்ல கட்டில். அதில் தான் அமர்ந்தாள். பழுப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாத ஒரு வண்ணத்தில் போடப்பட்டிருந்த துணிமீது அமர்ந்தவள் முகத்தை கீழிருந்து மேலாக சின்னதாக வெட்டினாள், வெட்டும் போதே கண்களில் ‘என்ன புரிஞ்சதா’ என்ற பாவனை.
“இல்ல, பார்க்க இவ்ளோ நல்லா இருக்க, இதுக்கு எதுக்கு?”- ச்சின்னா முருங்கை ஏறினான்.
சிரிக்கத் தோன்றி இருந்திருக்க வேண்டும். ஆனால் சிரிக்காமல் சொன்னாள்.
“நல்லா இருக்குறதுனாலத் தானே வர்ரீங்க, நீங்க என்கிட்ட சொன்னீங்களே உங்க பேரு, அது எப்பிடியும் பொய்யாத்தான் இருக்கும். அது மாதிரிதான் நான் சொல்ற பதில்களும்..வெட்டியா நேரத்தக் கடத்தாம கிளம்பு ஸார்”
டியூப் லைட்டில் இருந்த ஈயை கொஞ்சம் தள்ளி இருந்தவாறே நாக்கால் இழுத்துத் தின்றது ஒரு பல்லி. மற்ற ஈக்கள் பறந்து மறைந்து மீண்டும் விளக்கருகே பறந்தன. நாவை வெளியே சுழற்றியபடி பல்லி சரசரவென்று ஓடி இருளில் மறைந்து போனது.
“கொஞ்ச நேரம் பேசினாத்தான் என்ன? அப்பிடி என்ன வெறுப்பு உனக்கு..இல்ல அடுத்ததா யாரும் வரணுமா? காசு, சுகம் ரெண்டும் அலுக்காதா?”
மிகச் சத்தமாகச் சிரித்தாள். அடங்க வெகு நேரம் ஆனது. ஒரு மாதிரி ஆகிவிட்டது அவனுக்கு. மிகப் பெரிய அவமானம். கிளம்பி விட வேண்டியது தான்..என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மெலிதாகப் பேசினாள்
“சொல்லு சார்..எப்பிடி பிடிப்பு இருக்கும்? எல்லாரும் சொல்றமாதிரி, இந்தக் கிணத்துல தள்ளிட்டாங்க, காப்பாத்துங்க, வாழ்க்கை குடுங்கன்னு சொல்லப் போறது இல்ல.. ஏன்னா இனி நான் எவ்வளவு உத்தமியா உங்கூட வந்து வாழ்ந்தாலும் ஒரு ராத்திரி நீ என்ன விட்டு வெளியூருக்கு நிம்மதியா போக மாட்ட. அது முடியாது உன்னால.நாயகன் படம் பார்த்துட்டு இங்க வந்து டயலாக் பேசுற எத்தன பேரப் பார்க்குறோம்..நீ வேற ஏன் சார்?”
“அதுக்கு கேட்கல..” என்று பேசியவனை பார்வையால் நிறுத்தித் தொடர்ந்தாள்.
“எத்தனப் பேரப் பார்க்குறேன். நானாவது ஒரு ஆள். எனக்கு இந்தப் பட்டம். அந்தப் பேரோடயே போறேன் வர்ரேன். ஒவ்வொருத்தனும் எவ்வளவு தினுசா, பெத்தப் பேரோட திரியுரானுங்க, பஸ்ல, ட்ரெயின்ல, ஆஸ்பத்திரில, தியேட்டர்லன்னு..பார்க்குற பார்வையிலேயே. ஹும். பாதிப்பேரு பார்க்குறதோட ஓடுதுங்க. மீதிப்பேரு பேரம் பேசி, பயந்து ஓடுது, சிலது வந்துட்டு போகுது..ஆனா ஒவ்வொருத்தனும் நான் பண்ற தொழில்மாதிரிதான் நிமிசத்துக்கு நிமிசம் வாழ்றான்.”
“என்னா பேசுற? நீ அப்பிடி இப்பிடின்கறதாலா தானே உன்னப் பார்க்குறாங்க?”
“அட போ ஸார். எல்லாரையும் பார்வையிலேயே மேய்றதுனாலே தானே யார் அப்பிடி இப்பிடின்னு தெரியுது...பார்க்குறது நடக்குது தானே அப்போ”
ம்ஹூம், இவளிடம் தர்க்கம் செய்வதை விட கேட்டுக் கொண்டிருப்பது மேல் என்பது போல மெளனமாக இருந்தான். ஆனாலும் கொஞ்சம் மெதுவாகக் கேட்டான்.
“இப்பிடி ஏதாவது சொல்லி உன்னய நீயே ஏமாத்திக்கிறது தெரியுதா உனக்கு?”
“ஒண்ணு சொல்லவா?”
“ம்”
“உன் மேல எனக்குக் கோவமோ வெறுப்போ வந்தா அத காட்ட எனக்கு ரெண்டு நிமிசமோ ரெண்டு வார்த்தையோ போதும்..தெரியுமா?”
“____”
“புரியலயா..இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீ முடிச்சதும் நான் உன்னப் பார்த்து “அவ்வளவுதானா? என்னய்யா நீ ஆம்பள..ச்சே, சரி போ..’ன்னு சொல்லி இருந்தேன்னா நீ என்ன ஆகிப் போயிருப்ப?”
ஒரு நிமிடம் அவன் அமர்ந்திருந்த இடம் கீழ் நோக்கிச் செல்வதாக உணர்ந்திருப்பான் போல. இருக்கையின் கைப்பிடியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். முன் நெற்றியில் வியர்வை படரத் துவங்கியது.
அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்தாள்.
“நீய்யி நானுன்னு இல்ல..உலகத்துல இருக்குற அத்தன பொம்பளயும் ‘அவ்வளவுதானான்னு’ ஒரு கேள்விய கேட்க ஆரம்பிச்சா ஒரு ஆம்பள உயிரோட இருக்க முடியாது. இப்ப சொல்லு யார யார் ஏமாத்துறா?”
அவளிடம் இருந்து தண்ணீர் வாங்கிக் குடித்தான். ஆனாலும் தொண்டையில் மிடறு விழுங்கிக்கொண்டே இருந்தது. நாக்கை ஒரு நொடிக்கொரு முறை அனுப்பி உதட்டை ஈரப்படுத்திக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு மிகப் பெரும் சுமையைச் சுமக்க முடியாமல் அமர்ந்திருப்பது போலான உணர்வில் இருப்பதைப் போல அமர்ந்திருந்தான். லேசான கோவமும் எரிச்சலுமாகக் கேட்டான்.
“சரி விடு..உனக்குத் தெரிஞ்ச.. உங்க வீட்டு ஆம்பளைங்க தெரியாம இங்க வந்துட்டா என்ன பண்ணுவ?”
அத்தனை நேரம் தெனாவட்டாகவும் கொஞ்சம் மிடுக்காகவும் பேசிக்கொண்டிருந்தவள், நிமிர்ந்து ஒரு நிமிடம் அவனைப் பார்த்தாள்.
“என்னய விடு, இந்தத் தொழில்ல முக்காவாசிப் பேரோட நம்பிக்க என்னான்னா, நம்ம வீட்டு ஆம்பளங்க இந்த மாதிரி இடத்துக்கு வரமாட்டாங்கன்னு நம்புறது தான்., நம்ம வீட்டுப் பொம்பளைங்க இந்த மாதிரி தொழில்ல இருக்க மாட்டாங்கன்னு ஆம்பளங்க நம்பி வர்றதும் தான் நடக்குது. என்ன செய்யிறது? ஆனா என் விதி வேற மாதிரி”
“அதையும் சொல்லு, கேட்போம்” ..என்றாலும் அவளின் முந்தைய பேச்சுகளில் இருந்து முழுதும் வெளிவராதவன் போலிருந்தது அவன் குரல்.
“எனக்கு மட்டும் என்ன ஆசையா.. என்னக் கட்டிக்கபோறவன நம்பி மெட்றாஸ் வந்தேன்.. ரயில்வே ஸ்டேசன்ல காத்துட்டு இருக்கேன்னு போன் பண்ணேன். மொபைல்ல பேசிட்டே வந்தான்.. ‘ட்ராக்ல தான் நடந்து வந்துட்டே இருக்கேன் கண்ணுன்னு’ சொல்லிட்டே இருந்த போன்ல திடீர்னு பெருசா ரயில் சத்தம்..இன்னும் அந்த சத்தம் என் காதுல கேட்டுட்டே இருக்கு.. கடேசிச் சத்தம்.. என்னப் பார்க்கப் போற ஆசையில பேசிட்டே வந்தவன் பின்னாடி வந்த ரயில கவனிக்காம சிதறிப்போய்ட்டான். ”
அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அழவில்லை. சமாதானம் சொல்ல வேண்டிய தேவையும் இல்லாதவள் போல அமர்ந்திருந்தாள்.
“இந்த ஊருல திக்குத் தெரியாம ஒருத்தி மாட்டுனா மொக்கிற ஈல இருந்து ஒருத்தன் விடாம என்ன பண்ணலாம்னு.... கண்ணக் கட்டி காட்டுல விடுற ஊருல மாட்டி விவரம் தெரியாம அழிஞ்ச கூட்டத்துல நானும் ஒருத்தியாகிப் போனேன்”
மூலையின் ஓரத்தில் உடைந்திருந்த ஒரு மேசையும் அதன் மேல் இருந்த செல்போனையும் கவனித்தான். நூல்களைக் கொண்டும் செலஃபன் டேப்பைக் கொண்டும் ஒட்டப்பட்டிருந்த மொபைல் போன் அது. எடுத்தான்.
பதறிப்போய் எழுந்தவள் அதைக் கிட்டத்தட்ட அவனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டாள்.
சிதறிப்போனவன் விட்டுச் சென்ற துண்டுகளை ஒட்ட வைத்து உயிர்ப்பித்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டதைப் போலப் பார்த்தான்.
ஒட்டுகளைத் தடவிக் கொண்டே லேசாக மிக லேசாக விசும்பினாள். ச்சின்னா மெதுவாக எழுந்து அவள் அருகில் சென்று ஆறுதலாய்த் தொட்டான்.
நிமிர்ந்தவள், பலகீனமாகச் சிரித்தாள். “நீ கிளம்பு ஸார்”
“ம்” என்றுதான் சொல்ல நினைத்தான் ஆனால் எச்சில் உருண்டை அந்த ம்’மை விழுங்கியது போல குரல் கொடுத்தான்.
“இந்த போன் மாதிரிதான் நானும் இப்போ.. இதுல அலோன்னுபேசிக்கலாம்.. வேற எந்தப் பிரயோஜனமும் இல்ல..மெசேஜ்,ரேடியோ ஒண்ணும் வேல செய்யாது.. என் உடம்பு மாதிரியே..”
புருவம் சுழித்துப் பார்த்தான்.
“ஆமா சார்.. வந்து என்கூடப் படுத்துட்டுப் போலாம்..அவ்வளவுதான்..மனசு, துக்கம் சந்தோசம் எல்லாம் சிதறிப்போச்சு..”
அவளிடம் போய்ட்டு வர்ரேன் என்று சொல்லவேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்லாமல் வெளியேறினான்.
வெளியே லாரி, பால் பூத்தில் பாலை இறக்கிக் கொண்டிருந்தது. கழுத்தைச் சுற்றிலும் துணியைக் கட்டி அதைக் காதிலும் கவர் செய்துகொண்டு வேலையப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சந்து வழியாய் பயந்து பயந்து வெளியேறிவன் சுற்றும் முற்றும் பார்த்தான். மீண்டுமொருமுறை அவள் வீட்டைப் பார்த்தவாரே பற்ற வைத்த சிகரெட்டின் புகையோடு ஒரு நீளமான மூச்சும் வெளியேறிக்கொண்டிருந்தது அவனிடமிருந்து. அவன் சட்டைப் பையில் இருந்து வந்த சத்தம் கேட்டு அதிர்ந்தான். ‘இந்த நேரத்தில யார் கூப்புடுறா?’
“ஹலோ”
அவ்வளவுதான்..அந்தக் குரலைக் கேட்டமாத்திரத்தில் உணர்ந்து கொண்டான். எத்தனை வருடங்கள் தவமிருந்திருப்பான் அந்தக் குரலுக்குரியவளுக்காக.
“சொல்..லு..ம்மா.. “
“ச்சின்னா நா உன்னோடதான் இருப்பேன்.. மெட்ராஸுக்கு வந்துடுறேன்..இப்ப ரயிலேறப்போறேன்..உன்னய நம்பி வர்றேன்..”
அதுவரை இருந்த குழப்ப மனநிலையும் மீறி சந்தோஷத்தில் உளறிக்கொண்டிருந்தான்.. “எதுல வர்ற? எந்த ட்ரெயின்..”
பின்னால் வேகமாக வந்த லாரியைக் கவனிக்காமல் பேசிக்கொண்டே இருந்தான்.
சர்ர்ர்ரென வந்த லாரி...
அவன் அருகில் வந்து சத்தத்தோடு நின்றதும் திடுக்கென்று நிமிர்ந்தான்.
“விடிஞ்சும் விடியாம நடுரோட்டுல சாவுறதுக்கு என் லாரிதான் கெடச்சுதா..ஓரமா நின்னு பேசுய்யா”
கத்திய லாரி டிரைவரைப் பார்த்து சிரித்தான்.
“என்னாச்சு ச்சின்னா?”
“ஒண்ணுமில்ல..இன்னொரு செல் போன் செதறத் தெரிஞ்சது..”
“இன்னொன்னா..என்ன சொல்ற ச்சின்னா..?”
“ஒனக்குப் புரியாதும்மா.. நீ வா..நான் காலைல டாண்னு மொதோ ஆளா ஸ்டேசன்ல இருப்பேன்”
லாரி ஓரத்தில் இருந்து பால் துளித்துளியாய் சொட்டிக்கொண்டே போனது.
***
கேட்டவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான் சின்னதுரை என்ற ச்சின்னா.
“என்ன பதில் சொல்றது. நான் கேள்வி கேட்டா, நீ பதிலுக்கு கேள்விய கேட்குற”
“ம்..சொல்லு சார்..என்னன்னு சொல்வீங்க”
“நான் அதெக் கேட்கலயே..ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தன்னு தானேக் கேட்டேன்”
“எல்லாம் ஒரே கர்மம் தான். இங்க வர்றதுல பத்துக்கு எட்டு கேட்குறது இதத்தான். என்ன பதில் சொன்னாலும் அப்பிடியான்னுட்டு போகப்போற..இதுக்கு எதுக்குக் கேட்கணும்? அதுக்கு நான் பதில் வேற சொல்லணுமா?..கிளம்பு சார்..”
மேற்கூரை சுண்ணம் ஆங்காங்கே பெயர்ந்திருந்த வீடு அது. நடுவில் கருடர்களைக் கொண்டிருந்த பழைய காலக் கட்டிடம். கொஞ்சம் கீழிறங்கிப் பார்த்தால், ச்சின்னாவும் அவளும் பெரிதாகத் தெரிவார்கள். பக்கவாட்டுச் சுவர்களில் ஆங்காங்கே வட்ட வடிவில் எண்ணெய்க் கறைகள்..பின் மண்டை நிழல் போலப் படிந்திருந்தது.
நகர மனம் வரவில்லை. அவளிடம் எதையோ எதிர்பார்த்துத் தான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும் அவன். அது என்ன என்பதை அறியாமல் நகரப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டவனாக இன்னும் கொஞ்சம் வசதியாக அமர்ந்தான்.
வெளியே ஆட்டோ டிரைவர்கள் இருவர் சண்டை போட்டுக் கொண்டிருப்பதும் ஒரு லாரியை ‘வர்ர்ர்லாம் ரைரைரை ரைட் வா வா’ என ரிவர்ஸ்க்கு வழி சொல்லும் குரலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டிருந்தது.
தண்ணீர் குடித்துக் கொண்டே மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள். பச்சை வர்ண பாட்டிலில் தண்ணீரும் பச்சையாகத் தான் தெரிந்தது. விஸ்தாரமான அந்த வீட்டில் கொஞ்சம் பழைய பொருட்கள் ஆனாலும் பளிச்சென்று இருந்தது வீடு. அவளும் தான்.
தொழிலுக்கென்றே பிரத்யோகமாகச் செய்திருப்பார்களோ என்று தோன்றும்படியான நல்ல கட்டில். அதில் தான் அமர்ந்தாள். பழுப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாத ஒரு வண்ணத்தில் போடப்பட்டிருந்த துணிமீது அமர்ந்தவள் முகத்தை கீழிருந்து மேலாக சின்னதாக வெட்டினாள், வெட்டும் போதே கண்களில் ‘என்ன புரிஞ்சதா’ என்ற பாவனை.
“இல்ல, பார்க்க இவ்ளோ நல்லா இருக்க, இதுக்கு எதுக்கு?”- ச்சின்னா முருங்கை ஏறினான்.
சிரிக்கத் தோன்றி இருந்திருக்க வேண்டும். ஆனால் சிரிக்காமல் சொன்னாள்.
“நல்லா இருக்குறதுனாலத் தானே வர்ரீங்க, நீங்க என்கிட்ட சொன்னீங்களே உங்க பேரு, அது எப்பிடியும் பொய்யாத்தான் இருக்கும். அது மாதிரிதான் நான் சொல்ற பதில்களும்..வெட்டியா நேரத்தக் கடத்தாம கிளம்பு ஸார்”
டியூப் லைட்டில் இருந்த ஈயை கொஞ்சம் தள்ளி இருந்தவாறே நாக்கால் இழுத்துத் தின்றது ஒரு பல்லி. மற்ற ஈக்கள் பறந்து மறைந்து மீண்டும் விளக்கருகே பறந்தன. நாவை வெளியே சுழற்றியபடி பல்லி சரசரவென்று ஓடி இருளில் மறைந்து போனது.
“கொஞ்ச நேரம் பேசினாத்தான் என்ன? அப்பிடி என்ன வெறுப்பு உனக்கு..இல்ல அடுத்ததா யாரும் வரணுமா? காசு, சுகம் ரெண்டும் அலுக்காதா?”
மிகச் சத்தமாகச் சிரித்தாள். அடங்க வெகு நேரம் ஆனது. ஒரு மாதிரி ஆகிவிட்டது அவனுக்கு. மிகப் பெரிய அவமானம். கிளம்பி விட வேண்டியது தான்..என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மெலிதாகப் பேசினாள்
“சொல்லு சார்..எப்பிடி பிடிப்பு இருக்கும்? எல்லாரும் சொல்றமாதிரி, இந்தக் கிணத்துல தள்ளிட்டாங்க, காப்பாத்துங்க, வாழ்க்கை குடுங்கன்னு சொல்லப் போறது இல்ல.. ஏன்னா இனி நான் எவ்வளவு உத்தமியா உங்கூட வந்து வாழ்ந்தாலும் ஒரு ராத்திரி நீ என்ன விட்டு வெளியூருக்கு நிம்மதியா போக மாட்ட. அது முடியாது உன்னால.நாயகன் படம் பார்த்துட்டு இங்க வந்து டயலாக் பேசுற எத்தன பேரப் பார்க்குறோம்..நீ வேற ஏன் சார்?”
“அதுக்கு கேட்கல..” என்று பேசியவனை பார்வையால் நிறுத்தித் தொடர்ந்தாள்.
“எத்தனப் பேரப் பார்க்குறேன். நானாவது ஒரு ஆள். எனக்கு இந்தப் பட்டம். அந்தப் பேரோடயே போறேன் வர்ரேன். ஒவ்வொருத்தனும் எவ்வளவு தினுசா, பெத்தப் பேரோட திரியுரானுங்க, பஸ்ல, ட்ரெயின்ல, ஆஸ்பத்திரில, தியேட்டர்லன்னு..பார்க்குற பார்வையிலேயே. ஹும். பாதிப்பேரு பார்க்குறதோட ஓடுதுங்க. மீதிப்பேரு பேரம் பேசி, பயந்து ஓடுது, சிலது வந்துட்டு போகுது..ஆனா ஒவ்வொருத்தனும் நான் பண்ற தொழில்மாதிரிதான் நிமிசத்துக்கு நிமிசம் வாழ்றான்.”
“என்னா பேசுற? நீ அப்பிடி இப்பிடின்கறதாலா தானே உன்னப் பார்க்குறாங்க?”
“அட போ ஸார். எல்லாரையும் பார்வையிலேயே மேய்றதுனாலே தானே யார் அப்பிடி இப்பிடின்னு தெரியுது...பார்க்குறது நடக்குது தானே அப்போ”
ம்ஹூம், இவளிடம் தர்க்கம் செய்வதை விட கேட்டுக் கொண்டிருப்பது மேல் என்பது போல மெளனமாக இருந்தான். ஆனாலும் கொஞ்சம் மெதுவாகக் கேட்டான்.
“இப்பிடி ஏதாவது சொல்லி உன்னய நீயே ஏமாத்திக்கிறது தெரியுதா உனக்கு?”
“ஒண்ணு சொல்லவா?”
“ம்”
“உன் மேல எனக்குக் கோவமோ வெறுப்போ வந்தா அத காட்ட எனக்கு ரெண்டு நிமிசமோ ரெண்டு வார்த்தையோ போதும்..தெரியுமா?”
“____”
“புரியலயா..இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீ முடிச்சதும் நான் உன்னப் பார்த்து “அவ்வளவுதானா? என்னய்யா நீ ஆம்பள..ச்சே, சரி போ..’ன்னு சொல்லி இருந்தேன்னா நீ என்ன ஆகிப் போயிருப்ப?”
ஒரு நிமிடம் அவன் அமர்ந்திருந்த இடம் கீழ் நோக்கிச் செல்வதாக உணர்ந்திருப்பான் போல. இருக்கையின் கைப்பிடியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். முன் நெற்றியில் வியர்வை படரத் துவங்கியது.
அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்தாள்.
“நீய்யி நானுன்னு இல்ல..உலகத்துல இருக்குற அத்தன பொம்பளயும் ‘அவ்வளவுதானான்னு’ ஒரு கேள்விய கேட்க ஆரம்பிச்சா ஒரு ஆம்பள உயிரோட இருக்க முடியாது. இப்ப சொல்லு யார யார் ஏமாத்துறா?”
அவளிடம் இருந்து தண்ணீர் வாங்கிக் குடித்தான். ஆனாலும் தொண்டையில் மிடறு விழுங்கிக்கொண்டே இருந்தது. நாக்கை ஒரு நொடிக்கொரு முறை அனுப்பி உதட்டை ஈரப்படுத்திக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு மிகப் பெரும் சுமையைச் சுமக்க முடியாமல் அமர்ந்திருப்பது போலான உணர்வில் இருப்பதைப் போல அமர்ந்திருந்தான். லேசான கோவமும் எரிச்சலுமாகக் கேட்டான்.
“சரி விடு..உனக்குத் தெரிஞ்ச.. உங்க வீட்டு ஆம்பளைங்க தெரியாம இங்க வந்துட்டா என்ன பண்ணுவ?”
அத்தனை நேரம் தெனாவட்டாகவும் கொஞ்சம் மிடுக்காகவும் பேசிக்கொண்டிருந்தவள், நிமிர்ந்து ஒரு நிமிடம் அவனைப் பார்த்தாள்.
“என்னய விடு, இந்தத் தொழில்ல முக்காவாசிப் பேரோட நம்பிக்க என்னான்னா, நம்ம வீட்டு ஆம்பளங்க இந்த மாதிரி இடத்துக்கு வரமாட்டாங்கன்னு நம்புறது தான்., நம்ம வீட்டுப் பொம்பளைங்க இந்த மாதிரி தொழில்ல இருக்க மாட்டாங்கன்னு ஆம்பளங்க நம்பி வர்றதும் தான் நடக்குது. என்ன செய்யிறது? ஆனா என் விதி வேற மாதிரி”
“அதையும் சொல்லு, கேட்போம்” ..என்றாலும் அவளின் முந்தைய பேச்சுகளில் இருந்து முழுதும் வெளிவராதவன் போலிருந்தது அவன் குரல்.
“எனக்கு மட்டும் என்ன ஆசையா.. என்னக் கட்டிக்கபோறவன நம்பி மெட்றாஸ் வந்தேன்.. ரயில்வே ஸ்டேசன்ல காத்துட்டு இருக்கேன்னு போன் பண்ணேன். மொபைல்ல பேசிட்டே வந்தான்.. ‘ட்ராக்ல தான் நடந்து வந்துட்டே இருக்கேன் கண்ணுன்னு’ சொல்லிட்டே இருந்த போன்ல திடீர்னு பெருசா ரயில் சத்தம்..இன்னும் அந்த சத்தம் என் காதுல கேட்டுட்டே இருக்கு.. கடேசிச் சத்தம்.. என்னப் பார்க்கப் போற ஆசையில பேசிட்டே வந்தவன் பின்னாடி வந்த ரயில கவனிக்காம சிதறிப்போய்ட்டான். ”
அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அழவில்லை. சமாதானம் சொல்ல வேண்டிய தேவையும் இல்லாதவள் போல அமர்ந்திருந்தாள்.
“இந்த ஊருல திக்குத் தெரியாம ஒருத்தி மாட்டுனா மொக்கிற ஈல இருந்து ஒருத்தன் விடாம என்ன பண்ணலாம்னு.... கண்ணக் கட்டி காட்டுல விடுற ஊருல மாட்டி விவரம் தெரியாம அழிஞ்ச கூட்டத்துல நானும் ஒருத்தியாகிப் போனேன்”
மூலையின் ஓரத்தில் உடைந்திருந்த ஒரு மேசையும் அதன் மேல் இருந்த செல்போனையும் கவனித்தான். நூல்களைக் கொண்டும் செலஃபன் டேப்பைக் கொண்டும் ஒட்டப்பட்டிருந்த மொபைல் போன் அது. எடுத்தான்.
பதறிப்போய் எழுந்தவள் அதைக் கிட்டத்தட்ட அவனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டாள்.
சிதறிப்போனவன் விட்டுச் சென்ற துண்டுகளை ஒட்ட வைத்து உயிர்ப்பித்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டதைப் போலப் பார்த்தான்.
ஒட்டுகளைத் தடவிக் கொண்டே லேசாக மிக லேசாக விசும்பினாள். ச்சின்னா மெதுவாக எழுந்து அவள் அருகில் சென்று ஆறுதலாய்த் தொட்டான்.
நிமிர்ந்தவள், பலகீனமாகச் சிரித்தாள். “நீ கிளம்பு ஸார்”
“ம்” என்றுதான் சொல்ல நினைத்தான் ஆனால் எச்சில் உருண்டை அந்த ம்’மை விழுங்கியது போல குரல் கொடுத்தான்.
“இந்த போன் மாதிரிதான் நானும் இப்போ.. இதுல அலோன்னுபேசிக்கலாம்.. வேற எந்தப் பிரயோஜனமும் இல்ல..மெசேஜ்,ரேடியோ ஒண்ணும் வேல செய்யாது.. என் உடம்பு மாதிரியே..”
புருவம் சுழித்துப் பார்த்தான்.
“ஆமா சார்.. வந்து என்கூடப் படுத்துட்டுப் போலாம்..அவ்வளவுதான்..மனசு, துக்கம் சந்தோசம் எல்லாம் சிதறிப்போச்சு..”
அவளிடம் போய்ட்டு வர்ரேன் என்று சொல்லவேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்லாமல் வெளியேறினான்.
வெளியே லாரி, பால் பூத்தில் பாலை இறக்கிக் கொண்டிருந்தது. கழுத்தைச் சுற்றிலும் துணியைக் கட்டி அதைக் காதிலும் கவர் செய்துகொண்டு வேலையப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சந்து வழியாய் பயந்து பயந்து வெளியேறிவன் சுற்றும் முற்றும் பார்த்தான். மீண்டுமொருமுறை அவள் வீட்டைப் பார்த்தவாரே பற்ற வைத்த சிகரெட்டின் புகையோடு ஒரு நீளமான மூச்சும் வெளியேறிக்கொண்டிருந்தது அவனிடமிருந்து. அவன் சட்டைப் பையில் இருந்து வந்த சத்தம் கேட்டு அதிர்ந்தான். ‘இந்த நேரத்தில யார் கூப்புடுறா?’
“ஹலோ”
அவ்வளவுதான்..அந்தக் குரலைக் கேட்டமாத்திரத்தில் உணர்ந்து கொண்டான். எத்தனை வருடங்கள் தவமிருந்திருப்பான் அந்தக் குரலுக்குரியவளுக்காக.
“சொல்..லு..ம்மா.. “
“ச்சின்னா நா உன்னோடதான் இருப்பேன்.. மெட்ராஸுக்கு வந்துடுறேன்..இப்ப ரயிலேறப்போறேன்..உன்னய நம்பி வர்றேன்..”
அதுவரை இருந்த குழப்ப மனநிலையும் மீறி சந்தோஷத்தில் உளறிக்கொண்டிருந்தான்.. “எதுல வர்ற? எந்த ட்ரெயின்..”
பின்னால் வேகமாக வந்த லாரியைக் கவனிக்காமல் பேசிக்கொண்டே இருந்தான்.
சர்ர்ர்ரென வந்த லாரி...
அவன் அருகில் வந்து சத்தத்தோடு நின்றதும் திடுக்கென்று நிமிர்ந்தான்.
“விடிஞ்சும் விடியாம நடுரோட்டுல சாவுறதுக்கு என் லாரிதான் கெடச்சுதா..ஓரமா நின்னு பேசுய்யா”
கத்திய லாரி டிரைவரைப் பார்த்து சிரித்தான்.
“என்னாச்சு ச்சின்னா?”
“ஒண்ணுமில்ல..இன்னொரு செல் போன் செதறத் தெரிஞ்சது..”
“இன்னொன்னா..என்ன சொல்ற ச்சின்னா..?”
“ஒனக்குப் புரியாதும்மா.. நீ வா..நான் காலைல டாண்னு மொதோ ஆளா ஸ்டேசன்ல இருப்பேன்”
லாரி ஓரத்தில் இருந்து பால் துளித்துளியாய் சொட்டிக்கொண்டே போனது.
***
Labels:
புனைவு
Monday, March 8, 2010
இறகுகள் இறப்பதில்லை
நெடுஞ்சாலைப்
புளியமர நிழலோரம்
நிறுத்திக் குதித்தவர்
உதடு பிதுக்கலினூடே
முணுமுணுத்தார்
ப்ரேக் டவுன்’ -
பின்னங்கழுத்துக்
கைக்குட்டைய உருவிக்கொண்டே
பற்ற வைத்த
பீடிப் புகை
வெயிலில் மிதந்தலைந்தது.
‘கவர்மெண்ட்னாலே இப்பிடித்தான்’
'ட்ரெயின்ல போலாம்னா
கேட்டாத்தானே இந்தமனுசன்’
'ஆறுமணிக்கு அங்கிருக்கணும் ஓய்’
'பசிக்குமேப்பா’
புளியமரம் முழுக்க
பேச்சுகள்
கானல்நீர் தேங்கும்
தார்ச்சாலை
தகதகிப்பில்
பேருந்து சக்கர
ஓரத்தில் தோய்ந்திறந்தும்
மின்னிய
வண்ணத்துப் பூச்சியின்
இறகைத்
தொட்டுப் பார்த்தேன்
ஒட்டிக் கொண்டது
மூன்றாவது இருக்கையில்
தன்னந்தனியாய்
அமர்ந்திருப்பவள்
அழுதழித்த மை போல.
புளியமர நிழலோரம்
நிறுத்திக் குதித்தவர்
உதடு பிதுக்கலினூடே
முணுமுணுத்தார்
ப்ரேக் டவுன்’ -
பின்னங்கழுத்துக்
கைக்குட்டைய உருவிக்கொண்டே
பற்ற வைத்த
பீடிப் புகை
வெயிலில் மிதந்தலைந்தது.
‘கவர்மெண்ட்னாலே இப்பிடித்தான்’
'ட்ரெயின்ல போலாம்னா
கேட்டாத்தானே இந்தமனுசன்’
'ஆறுமணிக்கு அங்கிருக்கணும் ஓய்’
'பசிக்குமேப்பா’
புளியமரம் முழுக்க
பேச்சுகள்
கானல்நீர் தேங்கும்
தார்ச்சாலை
தகதகிப்பில்
பேருந்து சக்கர
ஓரத்தில் தோய்ந்திறந்தும்
மின்னிய
வண்ணத்துப் பூச்சியின்
இறகைத்
தொட்டுப் பார்த்தேன்
ஒட்டிக் கொண்டது
மூன்றாவது இருக்கையில்
தன்னந்தனியாய்
அமர்ந்திருப்பவள்
அழுதழித்த மை போல.
Labels:
கவிதை
Thursday, March 4, 2010
என்’ணங்கள் 04/03/10
சச்சின். ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்களை அடித்திருக்கிறார். 1988ல் விநோத் காம்ப்ளியுடன் ஜோடியாக அடித்த 664 அப்பொழுதைய கிரிக்கெட் உலகில் புருவ நெளிப்புகளை ஏற்படுத்தியது. ஒரு உலகக் கோப்பைப் போட்டியின் போது தன் தந்தையை இழந்தார். இந்தியா வந்தார். இறுதிக் கடமைகளைச் செய்துமுடித்த கையோடு மீண்டும் பறந்தார் மைதானம் நோக்கி. அர்பணிப்பு மட்டும் இருந்தால் போதும் எத்துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு சச்சின் சாலச் சிறந்த உதாரணம்.
அன்றைய ஆட்டத்தில் தோனி செய்ததை எந்த கோணத்தில் பார்ப்பது என்று தெரியவில்லை. கவுண்டமணி சொல்வது போல “அடிச்ச்சான் பார்றா பல்டி” என்பது போல அவர் “டயர்டாக இருந்தார், அதான் எல்லாப் பந்துகளையும் நானே ஆடி, அவரை ரிலாக்ஸ் செய்தேன்” ஆட்டம் முடிந்ததும் தோனி சொன்ன வார்த்தைகள். ரிலாக்ஸ் வேறு டென்ஷன் அல்லது ஃப்ரஸ்டேசன் ஏற்படுத்துவது என்பது வேறு. ஒரு ரன் தான் என்றாலும் அந்த ஒரு ரன்னால் ஒரு மகத்தான,20 ஆண்டுகால முயற்சி வீணாகப் போயிருக்கூடும்.
6 பந்துகள் தான் இருக்கிறது எனும் போது 6,4 என அடித்துக் கொண்டிருந்தது தவறு. அதுவும் டார்கெட் செட் செய்யும் பொழுது. அதைவிடக் கொடுமை, இரண்டாவது ரன்னிற்கு முயற்சித்தது. சச்சின் தோனி பக்கம் திரும்பவே இல்லை.
சச்சினின் இந்த 200 ரன்கள் சாதனையை உடைக்க சில பல வருடங்கள் ஆகும்.
ஒரு வருடத்திற்கு முன்னரே பதிவர்,மருத்துவர் புருனோ சச்சின் 200 அடிப்பார் என்று கணித்துச் சொன்னது ஆச்சர்யம். ஆசை வேறு கணிப்பு வேறு. அவருடையது கணிப்பு.
இவ்விடம் ஜோதிடம் பார்க்கப்படும் போர்டு போடலாம் டாக்டர்.
வாழ்த்துகள் சச்சின்.
***************
அவள் பெயர் தமிழரசி, வயது 18,மாநிறம். இந்த மாதம் 5ம் தேதி வெளிவரவிருக்கும் இந்தப் படம் சில காரணுங்களுக்காக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழர்களின் அடையாளம் என்று சொல்லப்படும் சில நாட்டுப்புற கலைகளை இழந்தும் களைந்தும் விட்டோம். இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் அவ்வகையிலான ஒரு கலையை காண, படத்தைப் பார்க்க வேண்டும். பார்ப்போம். விரிவாக எழுத வேண்டும்.
*****************
சுஜாதாவின் நினைவுக் கூட்டம்: கூட்டம் இல்லை. ஒரு வேளை பெரிய ஹாலாக இருந்ததாலோ என்னவோ.மேடையில் பேசிய எவரின் பேச்சிலும் சுரத்தே இல்லை. ஒரு வேளை இரண்டாவது வருடம் வந்து விட்டதாலோ என்னவோ.
மதன் பேசியபொழுது, அடுத்த முறை சுஜாதாவின் வாசகர்கள் கலந்துரையாடுவதைப் போல/விவாதிப்பது போல ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். நல்லதொரு கருத்து. ஒரே.
பதிவர்கள் லக்கி,அதிஷா,(பதிவர்களைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துகிறார் அதிஷா. போன வாரம் கல்யாணம் ஆன அதிஷாவிற்கு வாழ்த்துகள்!!) மோகன்குமார்,சங்கர்,பைத்தியக்காரன்,சுரேஷ் கண்ணன்(பை-சு எனும்படியான இரட்டையர்களாக உருவெடுக்கிறார்கள்..பி கேர்ஃபுல்..நான் நம்மளச் சொன்னேன்!). திரு டோண்டு ராகவன்,அவரின் நோட்டு, கேபிள் சங்கர் (D.R அசோக் வரவில்லை என்று நினைக்கிறேன்), கே.ஆர் அதியமான் என நிறைய பேர் வந்திருந்தார்கள். (யாருடைய பெயராவது விடுபட்டுப் போயிருந்தால் ஃபாளோயர் லிஸ்டில் தெரிந்துவிடும்!)
நாங்கள் கடைசி பெஞ்ச் மாணவர்கள் போல பேசிக் கொண்டிருந்ததால், சுரேஷ் கண்ணன் விருட்டென்று எழுந்து முன்வரிசையில் அமர்ந்தார். ஸாரி சு.க.
**********
பட்ஜெட். பெட்ரோல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது. கட்டுண்டோம் கதைதான். ஒரேடியாக ஒரு லிட்டர் 100 ரூபாய் என்று சொல்லி விட்டால் அதிர்ச்சியாகும் மக்கள் வழக்கம் போல டெல்லி டு கன்னியாகுமாரி வரை விதவித மொழிகளில் திட்டி விட்டு, மறந்து விடுவார்கள். எங்கு எது நடந்தாலும் மாட்டுவது நடுத்தர வர்க்கம் தான். இதில் ஆகப் பெரிய ஆச்சர்யம், இந்திய ஆட்சியாளர்களை தீர்மானிப்பது நடுத்தர வர்க்க மக்களின் ஓட்டுகள் தான்.
**********
நித்தியானந்த காட்சிகள் இன்னமும் வந்து கொண்டே இருக்கின்றன சன் நியூசில். இதன் பின்னனியில் இருக்கும் அரசியல் முன்னுக்கு வரும் பொழுது முன்னர் வந்தவைகள் எல்லாம் முக்கியமற்று போய்விடக் கூடும்.
சிலர் என்னிடம் அலைபேசியில் அழைத்து சாரு ஃபாளோ செய்தரே..உங்களுக்குச் சாருவ பிடிக்குமே..என்று கேட்டார்கள்.. இது என்னடா வம்பாப் போச்சு என்று நினைத்தாலும்..
ஊமைச்செந்நாய் குறித்து சிலாகித்து எழுதி இருக்கிறோமே..ஜெயமோகன் ஏதிலும் மாட்டி விடக்கூடாது..சுஜாதாவின் எழுத்துகள் முழுமை என்று சொல்லி இருக்கிறோமே, அவரின் ஒன்று விட்ட அண்ணன் தம்பிகள் எதிலும் மாட்டிவிடக்கூடாதே, போன்ற பயங்கள் வரத் துவங்கி விட்டன. எங்கு போனாலும் டென்ஷன், அலுவலகம்,வேலை, பதிவுலகம் என.. பேசாமல் சாமியார் ஆகிவிடலாம என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அன்றைய ஆட்டத்தில் தோனி செய்ததை எந்த கோணத்தில் பார்ப்பது என்று தெரியவில்லை. கவுண்டமணி சொல்வது போல “அடிச்ச்சான் பார்றா பல்டி” என்பது போல அவர் “டயர்டாக இருந்தார், அதான் எல்லாப் பந்துகளையும் நானே ஆடி, அவரை ரிலாக்ஸ் செய்தேன்” ஆட்டம் முடிந்ததும் தோனி சொன்ன வார்த்தைகள். ரிலாக்ஸ் வேறு டென்ஷன் அல்லது ஃப்ரஸ்டேசன் ஏற்படுத்துவது என்பது வேறு. ஒரு ரன் தான் என்றாலும் அந்த ஒரு ரன்னால் ஒரு மகத்தான,20 ஆண்டுகால முயற்சி வீணாகப் போயிருக்கூடும்.
6 பந்துகள் தான் இருக்கிறது எனும் போது 6,4 என அடித்துக் கொண்டிருந்தது தவறு. அதுவும் டார்கெட் செட் செய்யும் பொழுது. அதைவிடக் கொடுமை, இரண்டாவது ரன்னிற்கு முயற்சித்தது. சச்சின் தோனி பக்கம் திரும்பவே இல்லை.
சச்சினின் இந்த 200 ரன்கள் சாதனையை உடைக்க சில பல வருடங்கள் ஆகும்.
ஒரு வருடத்திற்கு முன்னரே பதிவர்,மருத்துவர் புருனோ சச்சின் 200 அடிப்பார் என்று கணித்துச் சொன்னது ஆச்சர்யம். ஆசை வேறு கணிப்பு வேறு. அவருடையது கணிப்பு.
இவ்விடம் ஜோதிடம் பார்க்கப்படும் போர்டு போடலாம் டாக்டர்.
வாழ்த்துகள் சச்சின்.
***************
அவள் பெயர் தமிழரசி, வயது 18,மாநிறம். இந்த மாதம் 5ம் தேதி வெளிவரவிருக்கும் இந்தப் படம் சில காரணுங்களுக்காக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழர்களின் அடையாளம் என்று சொல்லப்படும் சில நாட்டுப்புற கலைகளை இழந்தும் களைந்தும் விட்டோம். இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் அவ்வகையிலான ஒரு கலையை காண, படத்தைப் பார்க்க வேண்டும். பார்ப்போம். விரிவாக எழுத வேண்டும்.
*****************
சுஜாதாவின் நினைவுக் கூட்டம்: கூட்டம் இல்லை. ஒரு வேளை பெரிய ஹாலாக இருந்ததாலோ என்னவோ.மேடையில் பேசிய எவரின் பேச்சிலும் சுரத்தே இல்லை. ஒரு வேளை இரண்டாவது வருடம் வந்து விட்டதாலோ என்னவோ.
மதன் பேசியபொழுது, அடுத்த முறை சுஜாதாவின் வாசகர்கள் கலந்துரையாடுவதைப் போல/விவாதிப்பது போல ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். நல்லதொரு கருத்து. ஒரே.
பதிவர்கள் லக்கி,அதிஷா,(பதிவர்களைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துகிறார் அதிஷா. போன வாரம் கல்யாணம் ஆன அதிஷாவிற்கு வாழ்த்துகள்!!) மோகன்குமார்,சங்கர்,பைத்தியக்காரன்,சுரேஷ் கண்ணன்(பை-சு எனும்படியான இரட்டையர்களாக உருவெடுக்கிறார்கள்..பி கேர்ஃபுல்..நான் நம்மளச் சொன்னேன்!). திரு டோண்டு ராகவன்,அவரின் நோட்டு, கேபிள் சங்கர் (D.R அசோக் வரவில்லை என்று நினைக்கிறேன்), கே.ஆர் அதியமான் என நிறைய பேர் வந்திருந்தார்கள். (யாருடைய பெயராவது விடுபட்டுப் போயிருந்தால் ஃபாளோயர் லிஸ்டில் தெரிந்துவிடும்!)
நாங்கள் கடைசி பெஞ்ச் மாணவர்கள் போல பேசிக் கொண்டிருந்ததால், சுரேஷ் கண்ணன் விருட்டென்று எழுந்து முன்வரிசையில் அமர்ந்தார். ஸாரி சு.க.
**********
பட்ஜெட். பெட்ரோல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது. கட்டுண்டோம் கதைதான். ஒரேடியாக ஒரு லிட்டர் 100 ரூபாய் என்று சொல்லி விட்டால் அதிர்ச்சியாகும் மக்கள் வழக்கம் போல டெல்லி டு கன்னியாகுமாரி வரை விதவித மொழிகளில் திட்டி விட்டு, மறந்து விடுவார்கள். எங்கு எது நடந்தாலும் மாட்டுவது நடுத்தர வர்க்கம் தான். இதில் ஆகப் பெரிய ஆச்சர்யம், இந்திய ஆட்சியாளர்களை தீர்மானிப்பது நடுத்தர வர்க்க மக்களின் ஓட்டுகள் தான்.
**********
நித்தியானந்த காட்சிகள் இன்னமும் வந்து கொண்டே இருக்கின்றன சன் நியூசில். இதன் பின்னனியில் இருக்கும் அரசியல் முன்னுக்கு வரும் பொழுது முன்னர் வந்தவைகள் எல்லாம் முக்கியமற்று போய்விடக் கூடும்.
சிலர் என்னிடம் அலைபேசியில் அழைத்து சாரு ஃபாளோ செய்தரே..உங்களுக்குச் சாருவ பிடிக்குமே..என்று கேட்டார்கள்.. இது என்னடா வம்பாப் போச்சு என்று நினைத்தாலும்..
ஊமைச்செந்நாய் குறித்து சிலாகித்து எழுதி இருக்கிறோமே..ஜெயமோகன் ஏதிலும் மாட்டி விடக்கூடாது..சுஜாதாவின் எழுத்துகள் முழுமை என்று சொல்லி இருக்கிறோமே, அவரின் ஒன்று விட்ட அண்ணன் தம்பிகள் எதிலும் மாட்டிவிடக்கூடாதே, போன்ற பயங்கள் வரத் துவங்கி விட்டன. எங்கு போனாலும் டென்ஷன், அலுவலகம்,வேலை, பதிவுலகம் என.. பேசாமல் சாமியார் ஆகிவிடலாம என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
Labels:
என்’ணங்கள்
Wednesday, March 3, 2010
நல்ல்ல்ல்லாத் தொறந்ந்ந்தான்ய்யா கதவ...
ஒரு பக்கம் குறுஞ்செய்திகள், (watch sun news) மறுபக்கம் மார்ச் மாதத்திற்கான முக்கிய அலுவல்..குரங்குக் கை புண்போல மனம் செய்தியில் என்ன ஓடுகிறது என்பதில் லயித்திருந்தது. பார்த்தேன்.
எப்பொழுதுமே ஆசாமிகளைத் தொழுவதில் உடன்பாடில்லை. தந்தையைத் தவிர.
ஒரு திருடன் பிக்பாக்கெட் அடிப்பதற்கும், யோக்கியனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒருவன் திருடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நித்தியானந்தன் தன்னை தெய்வத்திருவுருவாக நிலைநாட்டிக் கொண்டிருந்து விட்டு, மறுபக்கம் ஆட்டு ஆட்டு என்று ஆட்டி இருக்கிறான். (இதில் சன் குழுமம் முதல் நாள் யார் அந்தப் பெண் என்பதைக் காட்டுவதில் கலாச்சாரம் காத்திருக்கிறதாம்..என்ன எழவோ?
சீட்டுக் கம்பெனில காசப் போடாதீங்கடா.. என கூவிக் கூவி கதறினாலும் இடுப்பில் இருப்பதையும் கழட்டி போட்டு விட்டு, பூட்டைப் போட்டவுடன் தொலைக்காட்சி மைக்கில் “மக கல்யாணத்துக்காக வச்சிருந்தேனுங்க” என்றோ “எல்லாம் போச்சே” என்றோ அழுவதைப் போலத்தான் இந்த சாமியார்கள் விசயங்களும். உண்மையான பக்தியைக் காட்டத்தான் முக்குக்கு முக்கு கோயிலக் கட்டி வச்சிருக்கானேப்பா அப்புறம் இவங்க வேற எதுக்கு? என்ற கேள்விகளுக்கு எப்பொழுதும் பதில் எழுவதே இல்லை.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கொருமுறை இப்படியான போலிகளின் செயல்கள் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இது தொடர்வது தான் மிகுந்த சீற்றத்தை ஏற்படுத்துகிறது.
இச்சைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்காக வேசம். எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம். இது அவரின் தனிப்பட்ட விசயம் என்பது போன்ற சப்பைக் கட்டுகள் ஒரு நாளும் எடுபடாது.
உயிரோடு பிடித்து ஒவ்வொரு நரம்பாக அறுத்தெறிந்தால்தான் மீண்டும் மீண்டும் முளைக்க மாட்டார்கள். இல்லை என்றால்,பிரேமானாந்தாவின் பளீர் சிரிப்பு போல நாளை இவனும் சிரித்துக் கொண்டே வேன் ஏறி வைகுண்டம் போவது போலவே ஜெயிலுக்கும் போய் வந்தவுடன் இருக்கவே இருக்கிறது கதவும்.. காற்றும்..
மீடியாக்கள் மீண்டும் தன் அடிப்படை நாகரீகத்தையும் தார்மீக பொறுப்பையும் மறந்து வீட்டிற்குள் தன்னைப் பார்க்கிறது உலகம் என்பதையும் மறந்து இந்தக் காட்சிகளை மீண்டும் மீண்டும் ப்ளூ ஃபிலிம் ரேஞ்சிற்குப் போட்டுக் காட்டுவதை என்னவென்று சொல்ல? இவர்களைக் கண்டிக்க எவ்வித சட்டம் இருக்கிறது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கேட்க வேண்டும். எவ்வளவு கேவலமான காட்சிகள், அதிர்வலையை ஏற்படுத்த இதுவல்ல வழி, ஒரு முறைக் காட்டியபின் அதற்கான செய்திகளையும் வீச்சையும் மட்டுமே பரப்ப வேண்டுமேயொழிய இப்படி இடம் சுட்டி பொருள் விளக்கிக் கொண்டிருந்தால் வீட்டிற்கு நாலு சாமியார்கள் உருவாகி விடும் அபாயம் இருக்கிறது.
சக மனிதனிடம் அப்படி என்ன அற்புத சக்தி நம்மை விட அதிகமாக இருந்துவிடப் போகிறது என்ற அடிப்படை அறிவியல்,உடலியல் சார்ந்த சந்தேகம் எழுந்தாலே இதுபோன்று எவர் பின்னும் செல்ல மாட்டார்கள்.
நல்லாத் தொறந்தான்ன்ய்யா கதவ.. என்று தோன்றினாலும், எவ்வளவு மோசமான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன கேட்டு விடப் போகிறோம் இந்த சமூகத்தை நோக்கி? காழ்புணர்ச்சி இல்லாத, சுயநலம் மறந்த, அடிப்படை நேர்மையோடு வாழும் சக மனிதர்களைத் தானே கேட்கிறோம்.
எனதான சமூக மக்கள் என்னில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நான் உங்களின் சமூகம். நீங்கள் எனது. நாளைய தலைமுறையை அடிப்படை நேர்மையோடு வாழும் மனிதர்களாக விட்டுச் செல்லல் நம் கடமை.
விரல் பிடித்து நடக்கச் சொல்லி கொடுக்கும் பொழுதே இது போன்ற நாசமத்துப் போகும் விசயங்களையும் விளக்கிச் சொல்லி நேர்மையை பிஞ்சில் புகட்டுவதே நஞ்சற்ற நாளைய சமூகத்திற்கான முதல்படி.
இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை சார்வாள் தலைமறைவாக இருப்பதாக தகவல். திருமதி/திருநிறைச்செல்வி ரஞ்சிதா மேடம் குறித்த தகவல்கள் ஏதுமில்லை. எங்கிருக்கிறாரோ..எந்த இருட்டில் இருக்கிறாரோ?
எப்பொழுதுமே ஆசாமிகளைத் தொழுவதில் உடன்பாடில்லை. தந்தையைத் தவிர.
ஒரு திருடன் பிக்பாக்கெட் அடிப்பதற்கும், யோக்கியனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒருவன் திருடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நித்தியானந்தன் தன்னை தெய்வத்திருவுருவாக நிலைநாட்டிக் கொண்டிருந்து விட்டு, மறுபக்கம் ஆட்டு ஆட்டு என்று ஆட்டி இருக்கிறான். (இதில் சன் குழுமம் முதல் நாள் யார் அந்தப் பெண் என்பதைக் காட்டுவதில் கலாச்சாரம் காத்திருக்கிறதாம்..என்ன எழவோ?
சீட்டுக் கம்பெனில காசப் போடாதீங்கடா.. என கூவிக் கூவி கதறினாலும் இடுப்பில் இருப்பதையும் கழட்டி போட்டு விட்டு, பூட்டைப் போட்டவுடன் தொலைக்காட்சி மைக்கில் “மக கல்யாணத்துக்காக வச்சிருந்தேனுங்க” என்றோ “எல்லாம் போச்சே” என்றோ அழுவதைப் போலத்தான் இந்த சாமியார்கள் விசயங்களும். உண்மையான பக்தியைக் காட்டத்தான் முக்குக்கு முக்கு கோயிலக் கட்டி வச்சிருக்கானேப்பா அப்புறம் இவங்க வேற எதுக்கு? என்ற கேள்விகளுக்கு எப்பொழுதும் பதில் எழுவதே இல்லை.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கொருமுறை இப்படியான போலிகளின் செயல்கள் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இது தொடர்வது தான் மிகுந்த சீற்றத்தை ஏற்படுத்துகிறது.
இச்சைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்காக வேசம். எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம். இது அவரின் தனிப்பட்ட விசயம் என்பது போன்ற சப்பைக் கட்டுகள் ஒரு நாளும் எடுபடாது.
உயிரோடு பிடித்து ஒவ்வொரு நரம்பாக அறுத்தெறிந்தால்தான் மீண்டும் மீண்டும் முளைக்க மாட்டார்கள். இல்லை என்றால்,பிரேமானாந்தாவின் பளீர் சிரிப்பு போல நாளை இவனும் சிரித்துக் கொண்டே வேன் ஏறி வைகுண்டம் போவது போலவே ஜெயிலுக்கும் போய் வந்தவுடன் இருக்கவே இருக்கிறது கதவும்.. காற்றும்..
மீடியாக்கள் மீண்டும் தன் அடிப்படை நாகரீகத்தையும் தார்மீக பொறுப்பையும் மறந்து வீட்டிற்குள் தன்னைப் பார்க்கிறது உலகம் என்பதையும் மறந்து இந்தக் காட்சிகளை மீண்டும் மீண்டும் ப்ளூ ஃபிலிம் ரேஞ்சிற்குப் போட்டுக் காட்டுவதை என்னவென்று சொல்ல? இவர்களைக் கண்டிக்க எவ்வித சட்டம் இருக்கிறது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கேட்க வேண்டும். எவ்வளவு கேவலமான காட்சிகள், அதிர்வலையை ஏற்படுத்த இதுவல்ல வழி, ஒரு முறைக் காட்டியபின் அதற்கான செய்திகளையும் வீச்சையும் மட்டுமே பரப்ப வேண்டுமேயொழிய இப்படி இடம் சுட்டி பொருள் விளக்கிக் கொண்டிருந்தால் வீட்டிற்கு நாலு சாமியார்கள் உருவாகி விடும் அபாயம் இருக்கிறது.
சக மனிதனிடம் அப்படி என்ன அற்புத சக்தி நம்மை விட அதிகமாக இருந்துவிடப் போகிறது என்ற அடிப்படை அறிவியல்,உடலியல் சார்ந்த சந்தேகம் எழுந்தாலே இதுபோன்று எவர் பின்னும் செல்ல மாட்டார்கள்.
நல்லாத் தொறந்தான்ன்ய்யா கதவ.. என்று தோன்றினாலும், எவ்வளவு மோசமான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன கேட்டு விடப் போகிறோம் இந்த சமூகத்தை நோக்கி? காழ்புணர்ச்சி இல்லாத, சுயநலம் மறந்த, அடிப்படை நேர்மையோடு வாழும் சக மனிதர்களைத் தானே கேட்கிறோம்.
எனதான சமூக மக்கள் என்னில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நான் உங்களின் சமூகம். நீங்கள் எனது. நாளைய தலைமுறையை அடிப்படை நேர்மையோடு வாழும் மனிதர்களாக விட்டுச் செல்லல் நம் கடமை.
விரல் பிடித்து நடக்கச் சொல்லி கொடுக்கும் பொழுதே இது போன்ற நாசமத்துப் போகும் விசயங்களையும் விளக்கிச் சொல்லி நேர்மையை பிஞ்சில் புகட்டுவதே நஞ்சற்ற நாளைய சமூகத்திற்கான முதல்படி.
இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை சார்வாள் தலைமறைவாக இருப்பதாக தகவல். திருமதி/திருநிறைச்செல்வி ரஞ்சிதா மேடம் குறித்த தகவல்கள் ஏதுமில்லை. எங்கிருக்கிறாரோ..எந்த இருட்டில் இருக்கிறாரோ?
Tuesday, March 2, 2010
ஓடிப் போலாமா?...
ஊரில் இருந்து வந்த நண்பனை ரிஸீவ் செய்து அழைத்து வர கோயம்பேடு-ஆசியாவின் பெரிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அவனுக்குச் சென்னை தெரியாது. ஏற்கனவே ஒரு முறை வந்து போன இன்னொரு நண்பன் சென்னையின் அபாய அக்கப் போருகளைப் பற்றி மிகத் தெளிவாக அவனிடம் சொல்லி இருந்த படியால், என்னை கட்டாயம் வரச்சொல்லி இருந்தான். அழைத்துப் போக வரவில்லை என்றால் இனி வரமாட்டான். அதனால் தான் அதிகாலை தூக்கத்தையும் பொருட்படுத்தாமல்,இதோ.. வந்தாகிவிட்டது.
அதிகாலை என்பது வேறு உலகம். டீ மாஸ்டர்கள் மருதமலை மாமணியையோ,ஷேச ஷைன சிகாமணியையோ, கந்தனுக்கு அரோகராவோ எஃப் எம்மின் பக்தியில் பாலைக் கரைத்துக்கொண்டிருக்கும் காட்சியில் துவங்கி, தினசரிகளை பிரித்து ஏரியாவாரியாக பறக்கும் சைக்கிளிஸ்ட்கள், பச்சைப் பசேல் காய்கறிகள் மீன்பாடி வண்டிகளில் வந்து இறக்குவது என ஒரு அமைதியான பரபரப்புச் சூழ்ந்திருக்கும்.
வண்டி லேட் என்பது நான் இரண்டு முறை மணிபார்த்துக் கொண்டதில் உணர்ந்தேன். ஒரு டீ குடிக்கலாம் என்று தோன்றும் முன் டீயைக் கையில் வாங்கிவிட்டேன். ஆவி பறப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது தான் அவர்களைக் கவனித்தேன்.
ஒல்லியான தேகம் என்று சொல்லிவிடமுடியாத அளவிற்கு உடம்பு அந்தப் பையனுக்கு. டீக்கடை வெளிச்சத்தில் அவன் அரும்பு மீசையும் முகமும் இன்னமும் அவன் சிறுவனா இளைஞனா என்ற கேள்வியைத் தொக்கி நிறுத்தியது. அவன் அருகில் இருந்தவளும் அது போலத்தான். சிறுமி என்று சொல்லிவிடமுடியாத அங்க வளர்ச்சிகள் அங்கங்கு. ஆனாலும் சிறு ப்ராயம். லேசான நடுக்கமும் ஏதோ ஒரு பரபரப்பும் கண்களில் மிரட்சியுமாய் நின்று கொண்டிருந்தார்கள்.
என் பார்வை, அவனுக்கு சங்கடமோ பயமோ ஏற்படுத்தி இருக்க வேண்டும். அனிச்சையாக நொடிக்கு ஒரு முறை என்னைப் பார்த்தவாறு இருந்தான். கொஞ்சம் சின்னதாய் ஒரு ஏர் பேக். ஜிப்பை புடைத்துக்கொண்டு துணிகள் இருந்ததால் ஜிப்பில் இடைவெளி இருந்தது. அந்தப் பெண்ணின் கையில் ஒரு மஞ்சள் பையில் லெட்சுமி ஜுவல்லர்ஸ்,பழனி என்று போட்டிருந்தது. இன்னொரு பிக் ஷாப்பர் பையில் கைப்பிடி இல்லாமல் துணியைக் கொண்டு கட்டி அட்ஜஸ்ட் செய்து பிடித்திருந்தாள்.
பச்சாதாபம் அல்லது இவர்கள் ஓடி வந்திருப்பார்களோ என்பதை உறுதிபடுத்தும் ஆர்வமோ ஏதோ ஒன்றின் காரணமாக அவனிடம் பேசத் தொடங்கினேன்.
“எந்த ஊர்ப்பா தம்பி?”
அவன் பதில் சொல்லவில்லை. என்றாலும் என்னைப் பார்த்தான். அவனிடம் தான் கேட்கிறேன் என்பதை உறுதிபடுத்த நினைத்தானோ என்னவோ. மீண்டும் கேட்டேன்.
“உன்னத்தான்ப்பா.. இந்த நேரத்துல இங்க நிக்கிறியே..எங்க போகணும்”
கொஞ்சம் தைரியம் வந்தவனாய் எனக்கு அருகில் வந்தவன்..மெதுவாகப் பதில் சொன்னான்.
“நாங்க பழனில இருந்து வர்றோம்.”
“இது யாரு..அக்காவா?”
“இல்லண்ணா..என்னோட லவ்வர்ஸ்”
‘லவ்வர்ஸ்’ என்ற அவன் சொற்ப்ரயோகம் அவனின் வெகுளித் தன்மையைக் காட்டுவதாகவே உணர்ந்தேன். அவன் தொடர்ந்தான்.
அவங்க மாமாவுக்கு எங்க விசயம் தெரிஞ்சு ஒரே பிரச்சன பண்ணிட்டாரு. இந்தப் புள்ள பயந்து போச்சுண்ணா. அதான் எதுனாலும் பார்த்துக்குவோம்..வா போய்ரலாம்னுட்டு ஓடி வந்துட்டோம்.
உறுதி படுத்தி விட்டதால், இப்பொழுது தீர்க்கமாக அவளைப் பார்த்தேன். ஏதே ஒரு வேகத்தில் ஓடி வந்திருக்கிறாள். இப்பொழுது பயமும் அதைத் தாண்டி அவன் மீதான ஒரு நம்பிக்கையும் குழப்பமாகத் தெரிந்தாள்.
“இங்க யாராச்சும் இருக்காங்களாப்பா உனக்கு?”
“ஒ..ரு ஃப்ரெண்ட் இருக்காண்ணா, வர்ரேன்னு சொன்னான்..ஆளக்காணோம்”
அவன் திக்கித் திணறி சொல்வதில் உண்மை இல்லை என்பது போலத் தோன்றியது.
“தம்பி, இந்த ஊரு நீ நினைக்கிற மாதிரி இல்ல. யாரும் தெரிஞ்சவங்க இல்லேன்னா அவ்வளவுதான்ப்பா.. அதுவும் இவ்வளவு சின்னப் பசங்களா இருக்கீங்க..”
“ஸார்..பயமுறுத்தாதீங்க ஸார்..”
“அண்ணேன்னே கூப்புடுப்பா.. நிஜமாத்தான் சொல்றேன். எப்போ கிளம்புனீங்க?”
“நேத்து நைட்டு ஸா..ண்ணா”
“ஒழுங்கா ஊருக்கு பஸ் ஏறுங்க..வீட்டுக்குப் போங்க..வேற எங்கயும் போய்ராதீங்க..கொஞ்ச நாள் போகட்டும். சரியா..”
சற்று நேரம் சென்னை குறித்தும் அவன் வயது குறித்தும் அந்தப் பெண் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் குறித்தும் விளக்கினேன்.
“சரிண்ணா..இங்கயே பஸ் வருமா.போறதுக்கு?”
அவனுக்கு வழியைச் சொல்லி அனுப்பவும், என் நண்பன் வந்த பேருந்து வரவும் சரியாக இருந்தது.
நண்பனோடு வீட்டிற்க்கு வந்து அலுவலகம் கிளம்பும் வரை, அந்த இருவரும் மறுபடியும் ஊருக்கே போய் இருப்பார்களா இல்லை சொல் பேச்சுக் கேட்காமல் வேறு எங்கும் போய் இருப்பார்களா என்றும், கூடாவே என்ன அவதிப்படுகிறார்களோ என்ற எண்ணமும் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. யார் எவர் என்று தெரியாவிட்டாலும் சில காட்சிகளும் நிகழ்வுகளும் மனதை அரித்துக் கொண்டே இருக்கின்றன.. இந்தப் பாடலின் விளக்கம் தெரிந்த பின் மிக ஆச்சர்யமாய் இருந்தது.
விளக்கம் :
கழைக் கூத்தாடிகள் மூங்கிலை நட்டு, கயிறு கட்டி,அதன் மேல் நின்று ஆடும் போது அடிக்கப்படும் பறை ஓசை போல, வாகை மரத்தின் முற்றிய (நெற்று)கிளைகள் காற்று அடிக்கும் போது அசைந்து ஒலிக்கும். அப்படியான அடர்ந்த மூங்கில் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த இருவரில், வில் வைத்திருப்பனின் கால்களில் கழல்கள் இருக்கின்றன. வலையணிந்த மெல்லிய அடி எடுத்து நடக்கும் அந்தப் பெண்ணின் கால்களில் சிலம்புகள் இருக்கின்றன.ஆகையால் இருவரும் திருமணமாகதவர்கள். இப்படி இந்த கொடிய காட்டின் வழிச் செல்கின்றனரே..இவர்கள் யாரோ?. யாராயிருந்தாலும் இவர்களிருவரும் மிகவும் இரக்கத்திற்குரியவர்கள்.
குறிப்பு : திருமணம் ஆனாதும் ஆணின் கழலும் பெண்ணின் காற்சிலம்பும் அகற்றப்பட்டு விடுவதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. (கண்ணகியின் காற்சிலம்பு குறித்தான தகவலும் அல்லது சிறுவயதில் போடப்படுவது எவ்வகைச் சிலம்பு என்பதையும் ஆராய்தல் வேண்டும்.)
சிறப்புக் குறிப்பு : மூங்கில் காட்டில் காற்றின் சலசலப்பை பறையின் ஓசையோடு ஒப்பிட்டது. ஒரு வித பய உணர்வை ஏற்படுத்தும் குறிப்பு. உளவியல் சார்ந்த ஒரு பாடல்.
பாடல்
வில்லோன் காலன கழலே. தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே. நல்லோர்
யார்கொல் அளியர் தாமே. ஆரியர்
கயிறோடு பறையில் கால்பொரக் கலங்கி
வாகை வெண்நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.
பெரும்பதுமனார் என்ற புலவர் பாலைத்திணையில் பாடிய அற்புதப் பாடல். சூழலை உணர்ந்து பொருந்தி பாடலைப் படிக்கும் பொழுது கண்முன் காட்சிகள்.
அதிகாலை என்பது வேறு உலகம். டீ மாஸ்டர்கள் மருதமலை மாமணியையோ,ஷேச ஷைன சிகாமணியையோ, கந்தனுக்கு அரோகராவோ எஃப் எம்மின் பக்தியில் பாலைக் கரைத்துக்கொண்டிருக்கும் காட்சியில் துவங்கி, தினசரிகளை பிரித்து ஏரியாவாரியாக பறக்கும் சைக்கிளிஸ்ட்கள், பச்சைப் பசேல் காய்கறிகள் மீன்பாடி வண்டிகளில் வந்து இறக்குவது என ஒரு அமைதியான பரபரப்புச் சூழ்ந்திருக்கும்.
வண்டி லேட் என்பது நான் இரண்டு முறை மணிபார்த்துக் கொண்டதில் உணர்ந்தேன். ஒரு டீ குடிக்கலாம் என்று தோன்றும் முன் டீயைக் கையில் வாங்கிவிட்டேன். ஆவி பறப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது தான் அவர்களைக் கவனித்தேன்.
ஒல்லியான தேகம் என்று சொல்லிவிடமுடியாத அளவிற்கு உடம்பு அந்தப் பையனுக்கு. டீக்கடை வெளிச்சத்தில் அவன் அரும்பு மீசையும் முகமும் இன்னமும் அவன் சிறுவனா இளைஞனா என்ற கேள்வியைத் தொக்கி நிறுத்தியது. அவன் அருகில் இருந்தவளும் அது போலத்தான். சிறுமி என்று சொல்லிவிடமுடியாத அங்க வளர்ச்சிகள் அங்கங்கு. ஆனாலும் சிறு ப்ராயம். லேசான நடுக்கமும் ஏதோ ஒரு பரபரப்பும் கண்களில் மிரட்சியுமாய் நின்று கொண்டிருந்தார்கள்.
என் பார்வை, அவனுக்கு சங்கடமோ பயமோ ஏற்படுத்தி இருக்க வேண்டும். அனிச்சையாக நொடிக்கு ஒரு முறை என்னைப் பார்த்தவாறு இருந்தான். கொஞ்சம் சின்னதாய் ஒரு ஏர் பேக். ஜிப்பை புடைத்துக்கொண்டு துணிகள் இருந்ததால் ஜிப்பில் இடைவெளி இருந்தது. அந்தப் பெண்ணின் கையில் ஒரு மஞ்சள் பையில் லெட்சுமி ஜுவல்லர்ஸ்,பழனி என்று போட்டிருந்தது. இன்னொரு பிக் ஷாப்பர் பையில் கைப்பிடி இல்லாமல் துணியைக் கொண்டு கட்டி அட்ஜஸ்ட் செய்து பிடித்திருந்தாள்.
பச்சாதாபம் அல்லது இவர்கள் ஓடி வந்திருப்பார்களோ என்பதை உறுதிபடுத்தும் ஆர்வமோ ஏதோ ஒன்றின் காரணமாக அவனிடம் பேசத் தொடங்கினேன்.
“எந்த ஊர்ப்பா தம்பி?”
அவன் பதில் சொல்லவில்லை. என்றாலும் என்னைப் பார்த்தான். அவனிடம் தான் கேட்கிறேன் என்பதை உறுதிபடுத்த நினைத்தானோ என்னவோ. மீண்டும் கேட்டேன்.
“உன்னத்தான்ப்பா.. இந்த நேரத்துல இங்க நிக்கிறியே..எங்க போகணும்”
கொஞ்சம் தைரியம் வந்தவனாய் எனக்கு அருகில் வந்தவன்..மெதுவாகப் பதில் சொன்னான்.
“நாங்க பழனில இருந்து வர்றோம்.”
“இது யாரு..அக்காவா?”
“இல்லண்ணா..என்னோட லவ்வர்ஸ்”
‘லவ்வர்ஸ்’ என்ற அவன் சொற்ப்ரயோகம் அவனின் வெகுளித் தன்மையைக் காட்டுவதாகவே உணர்ந்தேன். அவன் தொடர்ந்தான்.
அவங்க மாமாவுக்கு எங்க விசயம் தெரிஞ்சு ஒரே பிரச்சன பண்ணிட்டாரு. இந்தப் புள்ள பயந்து போச்சுண்ணா. அதான் எதுனாலும் பார்த்துக்குவோம்..வா போய்ரலாம்னுட்டு ஓடி வந்துட்டோம்.
உறுதி படுத்தி விட்டதால், இப்பொழுது தீர்க்கமாக அவளைப் பார்த்தேன். ஏதே ஒரு வேகத்தில் ஓடி வந்திருக்கிறாள். இப்பொழுது பயமும் அதைத் தாண்டி அவன் மீதான ஒரு நம்பிக்கையும் குழப்பமாகத் தெரிந்தாள்.
“இங்க யாராச்சும் இருக்காங்களாப்பா உனக்கு?”
“ஒ..ரு ஃப்ரெண்ட் இருக்காண்ணா, வர்ரேன்னு சொன்னான்..ஆளக்காணோம்”
அவன் திக்கித் திணறி சொல்வதில் உண்மை இல்லை என்பது போலத் தோன்றியது.
“தம்பி, இந்த ஊரு நீ நினைக்கிற மாதிரி இல்ல. யாரும் தெரிஞ்சவங்க இல்லேன்னா அவ்வளவுதான்ப்பா.. அதுவும் இவ்வளவு சின்னப் பசங்களா இருக்கீங்க..”
“ஸார்..பயமுறுத்தாதீங்க ஸார்..”
“அண்ணேன்னே கூப்புடுப்பா.. நிஜமாத்தான் சொல்றேன். எப்போ கிளம்புனீங்க?”
“நேத்து நைட்டு ஸா..ண்ணா”
“ஒழுங்கா ஊருக்கு பஸ் ஏறுங்க..வீட்டுக்குப் போங்க..வேற எங்கயும் போய்ராதீங்க..கொஞ்ச நாள் போகட்டும். சரியா..”
சற்று நேரம் சென்னை குறித்தும் அவன் வயது குறித்தும் அந்தப் பெண் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் குறித்தும் விளக்கினேன்.
“சரிண்ணா..இங்கயே பஸ் வருமா.போறதுக்கு?”
அவனுக்கு வழியைச் சொல்லி அனுப்பவும், என் நண்பன் வந்த பேருந்து வரவும் சரியாக இருந்தது.
நண்பனோடு வீட்டிற்க்கு வந்து அலுவலகம் கிளம்பும் வரை, அந்த இருவரும் மறுபடியும் ஊருக்கே போய் இருப்பார்களா இல்லை சொல் பேச்சுக் கேட்காமல் வேறு எங்கும் போய் இருப்பார்களா என்றும், கூடாவே என்ன அவதிப்படுகிறார்களோ என்ற எண்ணமும் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. யார் எவர் என்று தெரியாவிட்டாலும் சில காட்சிகளும் நிகழ்வுகளும் மனதை அரித்துக் கொண்டே இருக்கின்றன.. இந்தப் பாடலின் விளக்கம் தெரிந்த பின் மிக ஆச்சர்யமாய் இருந்தது.
விளக்கம் :
கழைக் கூத்தாடிகள் மூங்கிலை நட்டு, கயிறு கட்டி,அதன் மேல் நின்று ஆடும் போது அடிக்கப்படும் பறை ஓசை போல, வாகை மரத்தின் முற்றிய (நெற்று)கிளைகள் காற்று அடிக்கும் போது அசைந்து ஒலிக்கும். அப்படியான அடர்ந்த மூங்கில் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த இருவரில், வில் வைத்திருப்பனின் கால்களில் கழல்கள் இருக்கின்றன. வலையணிந்த மெல்லிய அடி எடுத்து நடக்கும் அந்தப் பெண்ணின் கால்களில் சிலம்புகள் இருக்கின்றன.ஆகையால் இருவரும் திருமணமாகதவர்கள். இப்படி இந்த கொடிய காட்டின் வழிச் செல்கின்றனரே..இவர்கள் யாரோ?. யாராயிருந்தாலும் இவர்களிருவரும் மிகவும் இரக்கத்திற்குரியவர்கள்.
குறிப்பு : திருமணம் ஆனாதும் ஆணின் கழலும் பெண்ணின் காற்சிலம்பும் அகற்றப்பட்டு விடுவதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. (கண்ணகியின் காற்சிலம்பு குறித்தான தகவலும் அல்லது சிறுவயதில் போடப்படுவது எவ்வகைச் சிலம்பு என்பதையும் ஆராய்தல் வேண்டும்.)
சிறப்புக் குறிப்பு : மூங்கில் காட்டில் காற்றின் சலசலப்பை பறையின் ஓசையோடு ஒப்பிட்டது. ஒரு வித பய உணர்வை ஏற்படுத்தும் குறிப்பு. உளவியல் சார்ந்த ஒரு பாடல்.
பாடல்
வில்லோன் காலன கழலே. தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே. நல்லோர்
யார்கொல் அளியர் தாமே. ஆரியர்
கயிறோடு பறையில் கால்பொரக் கலங்கி
வாகை வெண்நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.
பெரும்பதுமனார் என்ற புலவர் பாலைத்திணையில் பாடிய அற்புதப் பாடல். சூழலை உணர்ந்து பொருந்தி பாடலைப் படிக்கும் பொழுது கண்முன் காட்சிகள்.
Labels:
குறுந்தொகை,
சங்க இலக்கியம்
Monday, March 1, 2010
விண்ணைத் தாண்டி வருவாயா...

கெளதம் வாசுதேவ் மேனனின் இதுவரையிலான படங்களின் பொதுத்தன்மை என்று பார்த்தால், மின்னலே தொடங்கி இந்தப் படம் வரை எல்லாமே ஏதேனும் ஒரு பாடலின் வரியை டைட்டிலாக வைப்பது,கதாநாயகனின் வாய்ஸ் ஓவராக, நடுவில் எங்காவது ஒருசீனில் இருந்து..“நான் கார்த்திக்..நீங்க பார்த்துட்டு இருக்குற” என்ற கதை சொல்லி ஆரம்பித்தல், அப்பர் மிடிள் கிளாஸ் ஹீரோ, ஆங்கிலம்,குறிப்பாக வாட் த ஃபக் வசனம்,அப்பா,அம்மா, வசிக்கும் வீடு மிக ரம்மியமாக, வில்லனுக்கு கெளதம் மேனனே டப்பிங் குரலில் ‘ங்கோத்தா பாடு’என்று வசனம்,அப்புறம் சென்னை இளைஞர்களின் இரவு வாழ்க்கை என நேட்டிவிட்டியோடு இருக்கும். ஆம். நேட்டிவிட்டி என்றாலே கிராம மண்ணும், அருவாளும் தாடியும் ரத்தமும் மட்டுமே அல்ல, சென்னையில் இருப்பவர்களின் வாழ்க்கையும் நேட்டிவிட்டி தானே? அதைப் பதிவதில் கெளதம் தனக்கென ஒரு ஃபார்முலாவை வைத்திருக்கிறார். இதிலும் அதே சூத்திரம். மேற்சொன்ன எல்லாமே இருக்கிறது.
கதை. திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
காதலைக் காதலாய் காதலோடு சொன்னதே சிறப்பு. படம் முழுக்க சிம்புவும் த்ரிஷாவும் தான் வியாபித்திருக்கிறார்கள். கூடுமானவரை க்ளோஸ் ஷாட்ஸ். மேலோட்டமாய்ப் பார்த்தால் சற்றே தொய்வாகத் தான் இருக்கும். ஆனால் காதல் என்றால் அது இருவருக்குள் மட்டும் நடக்கும் ஒரு அற்புதம் தானே. அதை சிறப்பாகவும் இருவரை மட்டுமே அதிக நேரம் தைரியமாகவும் காட்டி இருக்கிறார் கெளதம்.
நளினி ஸ்ரீராம்...இந்தப் படத்தைப் பொறுத்தவரை இவரின் பங்கு மிக முக்கியமானது. உடைகள் வடிவமைப்பு இவர்தான். த்ரிஷாவையும் சிம்புவையும் இதைவிடச் சிறப்பாகவும் அதி முக்கியமாக சிம்ப்பிளாகவும் காட்டியதால் தான் இந்தப் படம் சொல்ல வந்த காதல் மனதோடு ஒன்ற வைத்தது.
மனோஜ். இவரின் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாக இல்லாமல் கண்முன் நிற்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார். அவ்வந்த சூழலுக்கும் மனநிலைக்கும் ஏற்ற லைட்டிங்கையும் கலரையும் பின்புலமாக வைத்து எடுத்திருக்கும் விதம் மிகச் சிறப்பு.
சிம்பு படகில் அமர்ந்தவாறு த்ரிஷாவிடம் சொல்லும் ஒரு காட்சி,
“உன்னை முதல்ல பார்த்தப்போ, நீ மட்டும் தான் என் கண்ணுக்குத் தெரிஞ்ச, பின்னால இருந்த நிலா ஃபேட் ஆகி அவுட் ஆஃப் போகஸ் ஆகிடுச்சு”
இதைச் சொல்லும் சிம்புவின் பின்னால் மிக நல்ல ஏரி,வானம்,பசுமை என மிக ரம்மியமாய் கேரளச் சூழல் இருக்கும். சிம்புவின் கண்களின் வழியே த்ரிஷா இந்த வசனத்தைக் கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால் திரை முழுக்க த்ரிஷா மட்டும் தான். பின்புலத்தில் எல்லாமே ஃபேட், அவுட் ஆஃப் ஃபோகஸ்.
மிக நுட்பமாய் இப்படி நிறைய செதுக்கி இருக்கிறார்கள்.
காதல். இன்ன காரணத்திற்காக ஒருவர் மீது வருகிறது என்று தெரிந்துவிட்டால், காதல் மீதான காதல் போய்விடும். அவரவர் இன்னது செய்தால் இவருக்கு என் மீது காதல் வந்துவிடும் என 2x2=4 என்று ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நல்லவேளையாக எதிர்பாலின கவர்ச்சி தாண்டி ஒருவர் மீது காதல் ஏற்படும் தருணம் எதனால் என்ற காரணம் இதுவரை தெரிந்ததில்லை, இனி தெரியப்போவதும் இல்லை. கிட்டத்தட்ட இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்.
“எவ்வளவோ பேர் இருக்கும்போது ஜெஸ்ஸிய மட்டும் ஏன் காதலிக்கிறேன்” இந்த வரிகளை நிறைய மாடுலேசன்களில் நிறைய தடவை படம் முழுக்க சொல்வார் சிம்பு. காரணம் இல்லாத/தெரியாக் காதல் தான் காதல்.(போலிஸ் ஸ்டேஷனில் மாட்டிக்கொண்டுவிடும் ஒரு சூழலில் சிம்புவின் நண்பனாக வரும் கணேஷ் கதாபாத்திரம் அதே டயலாக்கை “எவ்வளவோ பேர் இருக்கும் போது இவ மேல ஏண்டா காதல் வந்துச்சு உனக்கு” என புலம்புவது டயமிங். படம் முழுக்கவே இந்த நண்பரின் வசனங்கள் ரசனை.
காக்க காக்க படத்தின் காதல் எபிஸோடு மிக அதிக அளவில் பேசப்பட்டதன் காரணம் அதன் வசனங்கள். (இந்த லவ் ட்ராக்கில் முழுக்க முழுக்க செதுக்கியது ‘தினந்தோறும் நாகராஜ்’ என்ற அற்புதக் கலைஞன்..ஜோடியில் பிராசாந்தின் தாடி வைத்த நண்பர். குடியால் இப்பொழுது இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர்..இல்லாமல் இருப்பவர்.)
போலவே இந்தப் படத்திலும் மிக நல்ல வசனங்கள்.(கெளதம் மேனன் வசனங்கள்)
“இனி எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்..நினைக்காத..முடிஞ்சுதான் போச்சுன்னு சொன்னா” போன்றவை லைட்டர் பக்கம் என்றால்..
பிரிந்து சந்திக்கும் ஒரு தருணத்தில் த்ரிஷா சிம்புவிடம் “ உனக்குன்னு இப்போ வேற ஒருத்தி இருப்பான்னு நம்புறேன்..கேன் யூ டிஸ்க்ரைப் ஹெர்” என்றதும்.. “ஆமா இருக்கா”..என்று ஆரம்பித்து,அவளின் அங்கங்களை மெதுவாக சொல்லிக்கொண்டே வரும் சிம்புவின் வசனம் போகப் போக இன்னமும் த்ரிஷா மட்டும் தான் மனதில் இருக்கிறார் என்பதை மொழிப்படுத்தும் இடம்..வசனமும் நடிப்பும் கண்ணீரும் கலந்து குழைக்கப் பட்ட இடம்.
சிம்பு படம் முழுக்கவே கையை பின்மண்டையில் தட்டித் தேய்ப்பதில் துவங்கி மேற்சொன்ன வசனத்தின் போது கன்னக் கதுப்புகளையும் நடிக்க வைப்பது வரை கமலை பின்பற்றுகிறார் என்றாலும் நெருடவில்லை..மிக இயல்பாய் இருக்கிறது.
இன்னமும் நிறைய இடங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக, நண்பனின் வீட்டில் தனியாக சந்திக்கும் பொழுது “என்னை தப்பா நினைக்க மாட்டாரே.” என்ற ஒரு பெண்ணின் இயல்பான ஆதங்க பயத்தில் துவங்கி, தோள்சாய்ந்து பேசும் வசனங்கள் பார்ப்பவர்களிடம் இருக்கும் காதலை அதிகப்படுத்துவதாகவும் ,மறந்திருந்தால் மீட்டெடுப்பதாகவும் மிக அற்புத வெளிப்பாடாக இருந்தது.
பாடல்கள் ஹிட் என்கிறார்கள்..என்னைப் பொறுத்தவரை பாடல்கள் அந்த அளவிற்கு கவரவில்லை. எடுத்த விதமும் அதே ஸூம் ஸ்டைலில் “ஹூவாரஸ்ஸ்யே வெள்ளி வெள்ளி நிலவே” தான் கண்ணுக்குள் வருகிறது.
காதல் படத்தில் காதல் மட்டுமே இருக்க வேண்டும் என்று நீங்களும் நினைத்தால் இந்தப் படம் உஙகளுக்கும் பிடிக்கும்.
முன்முடிவுகளோ அரசியலோ ஏதுமன்றி, காதலையும்,காதலியையும் காதலிக்கும் ஒரு மிகச் சிறந்த காதலன் என்ற முறையில் இப்படம் என்னைத் தாண்டிச் செல்லாமல் மனதோடு தங்கிவிட்டது.
நன்றி கெளதம்.
*********
படத்தின் இறுதியில் வரும் ‘அட’ என்ற அதிர்ச்சி க்ளைமாக்ஸை வலைகளில் கூட யாரும் குறிப்பிடவில்லை..மிகக் கவனமாக..ஆனால் நேற்று கலைஞர் டிவியில் நடந்த நேரடி ஒளிபரப்பில் ஆரம்பம் முதல் அந்தம் வரை கதையையும் அந்த அட திருப்பத்தையும் போட்டு உடைத்தாலும் பரவாயில்லை, சுக்குநூறாக்கி விட்டார்கள்..ஏன் என்று தெரியவில்லை.
*********
Labels:
சினிமா
Subscribe to:
Posts (Atom)