Saturday, November 7, 2009

பதிவர் சந்திப்பு இன்று இல்லை-7/11/09

மீண்டும் மழை.பதிவர் சந்திப்பு நடைபெறாததன் காரணம் மழை.

கேபிள் சங்கர் அழைத்து இன்று என்ன செய்யலாம் என்று கேட்டார்.

இன்று பதிவர் சந்திப்பு நடத்தி அதில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்பினால்...

இனி வீட்டில் எந்த வேலை சொன்னாலும் மழையைக் காரணம் காட்ட முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு முடிவெடுங்கள் என்றும் சொன்னவுடன்..பதிலையே காணோம்..

ரெண்டு மூணு ஹலோவிற்குப் பிறகு லைனில் வந்தவர்..கேன்சல்னு பதிவு போட்டுட்டேன் ஜி என்றார்.

ரைட்டு.

‘குளுகுளு’ மழை...

..

9 comments:

KaveriGanesh said...

நானும் பார்க்கிறேன்,சந்திப்புன்னாலே இந்த இயற்கைக்கு பிடிக்காதோ, என்னவோ, மழை கொட்டுது,
சர் தான், உள் அரங்கில் வைப்போம் என்றால் மவனே, ரூமுக்குள்ளே வக்கிறாயா, காற்றழுத்த தாழ்வு நிலையையும், புயுலையம் உண்டாக்கி ஓருத்தரும் வெளில வரமுடியாம செய்யுது.

முதல்ல அதுக்கு ஓரு பரிகாரம் பண்ணுங்கப்பா

அமுதா கிருஷ்ணா said...

good..எப்படிடா வரதுன்னு கவலையா இருந்தது....

KaveriGanesh said...

பதிவர் சந்திப்பு ரத்தும், நான் எடுத்த புகைப்படங்களும்
என்ற‌ என்னுடைய‌ ப‌திவை ப‌டிக்கவும்.

http://kaveriganesh.blogspot.com/

Vidhoosh said...

///இனி வீட்டில் எந்த வேலை சொன்னாலும் ///

ஹுக்கும்...இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. உங்க வீட்டம்மிணியை கொஞ்சம் என்னோடு பேசச் சொல்லுங்கோ... :))

-வித்யா

Cable Sankar said...

தலைவரே ஏன் குடும்ப ரகசியத்தை எல்லாம் சொல்லிட்றீங்க..?:(

அன்புடன்-மணிகண்டன் said...

///இனி வீட்டில் எந்த வேலை சொன்னாலும் ///

இந்த மாதிரி எல்லாம் பேசி என்னைப் போன்ற வருங்கால குடும்பஸ்தர்களை பயமுறுத்துவதே வேலையாப் போச்சு.. அவ்வ்வ்வ்வ்..... :)

Naresh said...

முன்னல்லாம், மழை வரக் கூடாதுன்னா அன்னிக்கு வானிலை மையத்துல இருந்து இன்னிக்கி மழை வரும் அறிவிப்பு விடச் செய்வாங்கள்லாம்...உடனே வர்ற மழையும் நின்னுருமாம்....

இப்ப மழை வேணும்னா, உடனே பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணச் சொல்றாங்களாம்.....எப்படியோ பதிவர்களின் சமுதாயப் பணி எந்தெந்த விதத்துலியோ நடக்குது....

வாழ்க அவர்கள் தொண்டு.....

நரேஷ்
www.nareshin.wordpress.com

யுவகிருஷ்ணா said...

கலக்கல் தல... அருமையான பதிவு!


.
.
.
.
.
.
.
.

யாரு எந்தப் பதிவு போட்டாலும், படிக்காமலேயே இப்படி பின்னூட்டம் போட்டாதான் பிரபலப்பதிவர்னு சொல்றாங்க. அதனாலேதான்! :-)

ரவிச்சந்திரன் said...

நர்சிம்,
நான் வெள்ளிக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்து மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு சென்னையிலிருந்து சிங்கை கிளம்பியபோது மழை விட்டு விட்டது :) திட்டமிட்ட வேலைகளில் பாதியைத்தான் நிறைவேற்ற முடிந்தது. அடுத்த பயணத்தின்போது சந்திக்கலாம்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்