மெதுவாக
வழிந்து கொண்டிருக்கின்றன
மெல்லிசையைப்போல..
உடைந்து
வெடித்துக்கொண்டிருக்கின்றன
நொறுங்கும் கோப்பையினின்று
திரவச் சிதறல்கள்போல..
கசிந்து
ஓழுகிக்கொண்டிருக்கின்றன
பாறைக்கீறல் தாரைகள்போல
சில முத்தங்களின் ஈரத்தையும்
அவளுள்
மடிந்து
உடைந்து
மீண்டு மடியும்
நொடிகளையும்
சேகரித்துக்கொண்டிருக்கிறேன்
மிக ரகசியமாக.
ரகசியங்கள்
Posted by
நர்சிம்
Friday, September 3, 2010
Labels: கவிதை
15 comments:
//அவளுள்
மடிந்து
உடைந்து
மீண்டு மடியும்
நொடிகளையும்//
செத்து செத்து பிழைக்கிறேன்னு சொல்லுவாங்களே அதானா இது?
ஏதாவது சொல்லீருவேன்....
ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும்.
அப்போதான் அது ரகசியம்.
நல்லா இருக்குங்க...
'நிஜமா' நல்லா இருக்கு நர்சிம்.
//மெதுவாக
வழிந்து கொண்டிருக்கின்றன
மெல்லிசையைப்போல..//
:)))))))))
ரசித்தேன் ..
:) nice one
:) nice one
சேகரித்துக்கொண்டிருக்கிறேன்
மிக ரகசியமாக
சிருவாட்டுப் பணம் போல.
முத்தங்களின் ஈரம் = அரவணைப்பு; மடிந்து/ உடைந்து/ மீண்டு மடியும் = நிராகரிப்பு.
இசை (இதயம்) மென்மையாய், கோப்பை (மகிழ்வெறி)த் திரவச் சிதறலாய், பாறை (மூளைச்செருக்கு) ஒழுகலாய்...
கைநழுவல்கள் ஊடே பொருளற்றுத் தோன்றும் சேகரம்!
ஒ!
Nice feeling..
//அவளுள்
மடிந்து
உடைந்து
மீண்டு மடியும்
நொடிகளையும்//
Awesomeeeee !!!!!!
நல்லா இருக்கு...
சூப்பருங்க. எனக்கு சொல்லத் தெரியல, ஆனா ஒரு விஷயத்தை நச்சுன்னு ரெண்டே விஷயத்தோட ஒப்பிட்டு முடிச்சிருக்கீங்க.. எனக்கு பிடிச்சது அதுதாங்க.
ஒரு சின்ன சந்தேகம்,
//நொறுங்கும் கோப்பையினின்று
திரவச் சிதறல்கள்போல//
//பாறைக்கீறல் தாரைகள்போல//
இதெல்லாம் நிகழ்வுகளின் சரியான உவமைகள் தான்.. ஆனா
//வழிந்து கொண்டிருக்கின்றன
மெல்லிசையைப்போல// வழியும் மெல்லிசையே ஒரு உருவகம் தான், உவமையா எடுத்துக்கலாங்களா?
உவமேயம்->உவமை(உவமேயம்)->உவமை
அப்புறம், இடைவெளி எல்லாம் இல்லீங்க, ஊருக்கு போயிட்டேன். மத்தபடி உங்க தமிழ் ஆளுமைக்கு நான் நல்ல ரசிகை.
ramyamaave irukku....
vazhthukal nursim sir.....!
3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்
http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html
Post a Comment